Tuesday, June 23, 2009

அம்மா....

நம்மில் மட்டும் முரண்பாடுகள்..
கருவறைக்குள் தானே தெய்வம்..
இங்கு
தெய்வத்துக்குள் கருவறை..
கருவறை வசித்த பக்தன்
நான்..
என்னை அறியா நாட்களில்
நான் கொடுத்த மூத்திர
அபிஷேகங்களுக்கான
எச்சில் முத்த பதிலடியின்
இனிப்பு சுவை எங்கும் உணரவில்லை
இன்னும் நான்..
இன்று வரைக்கும்
உன்மடித்தலையனையில்
மட்டுமே
ஆழத்தூக்கம் உணரமுடிகிறது
என்னால்..
உனக்கான உவமைச்சொல்
இன்றுவரை எந்த மொழியிலும்
உருவாக்கப்படவில்லை..
காலம் உனைபிரிப்பின்
உன் கருவறை கொடுத்துவிட்டு போ
எனை பிரிப்பின்
எப்படியும் வருவேன்
மீண்டும் உனக்குள்...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.