Monday, June 22, 2009

சந்திப்பின் கணம்..!

சந்திப்பின் கணம்..!

*

கண்களின் தவிப்பை
கால்கள் மொழிப்பெயர்க்கின்றன..

இன்னும் விரைவாய்...
இன்னும் விரைவாய்...

நேரம் ஓடிக்கொண்டிருக்கும் சாலைகள்
எல்லைகளற்று நீள்கின்றன...

மனிதனின் மாயக்கரங்கள்
பாதைகளைப் பின்னலிட்டு... பின்னலிட்டு...
இலக்கின்றி தூரங்களில் தொலைகின்றன.

இன்னும் விரைவாய்...
இன்னும் விரைவாய்...

சந்திப்பின் கணம்
எங்கோ நிற்கக் கூடும்... கால் வலிக்க...

சிறகு முளைக்க மறந்த....
மனத்திற்கு..
தவிப்பின் அடர்த்தியை..
வாசிக்கத் தெரியாமல்...
நேசத்தின் நிழலில்... மெதுவாய் நடக்கிறது...

இன்னும் மெதுவாய்..
இன்னும் மெதுவாய்....


****

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.