Tuesday, June 23, 2009

பிரிய தோழி!”

பிரிய தோழி
உன் முகவரி இந்த
உப்பு காற்றில்
கரைந்துகொண்டிருக்கிறது
அலையலையாய் வந்துபோகும்
உன் நினைவுகளை
கடலலைகள் இழுத்துசெல்ல
கண்ணீருடன் பார்த்திருக்கிறேன்
உனது தடம் இதோ
நடுக்கடலில்……………………………

நிர்ப்பந்தத்தால் பிரிவதாய் நீயும்
உன் சொல் மதிக்கும்
உத்தம செயல் புரிவதாய் நானும்
நம் நட்பின் கல்லறைமேல் நின்று
உரக்க கூவிக்கொண்டிருக்கிறோம்!

நட்பு கொலை செய்யப்பட்டதா?
நட்பு விபத்துக்குள்ளானதா?
இல்லை இல்லை
அது மனசாட்சி
துறந்த மனங்களில் வாழ்ந்ததிற்காய்
தற்கொலை செய்திருக்கவேண்டும்.

இனி
இரவில் நாம்
உரையாடும் நேரத்தில்
தொலைபேசி ஒளித்து
தலையணை நனைத்திருப்போம்
அறிவுறுத்த, ஆறுதல் சொல்ல, அரவணைக்க
அருகில் நீயிருப்பதாய்
சூன்யத்தில் நானுன்னை
விளிக்கவும் கூடும்!

எதுவெனினும் இன்றே
இறுதி நாளென்பதால்
உன் அழுகை கலந்த சம்மதம்
கேட்க தைரியமின்றி
என்னிலிருந்து உன்வரை நீண்டிருக்கும்
மௌனத்தால் சொல்கிறேன்
“போய் வா என்
பிரிய தோழி!” உன் முகவரி இந்த
உப்பு காற்றில்
கரைந்துகொண்டிருக்கிறது
அலையலையாய் வந்துபோகும்
உன் நினைவுகளை
கடலலைகள் இழுத்துசெல்ல
கண்ணீருடன் பார்த்திருக்கிறேன்
உனது தடம் இதோ
நடுக்கடலில்……………………………

நிர்ப்பந்தத்தால் பிரிவதாய் நீயும்
உன் சொல் மதிக்கும்
உத்தம செயல் புரிவதாய் நானும்
நம் நட்பின் கல்லறைமேல் நின்று
உரக்க கூவிக்கொண்டிருக்கிறோம்!

நட்பு கொலை செய்யப்பட்டதா?
நட்பு விபத்துக்குள்ளானதா?
இல்லை இல்லை
அது மனசாட்சி
துறந்த மனங்களில் வாழ்ந்ததிற்காய்
தற்கொலை செய்திருக்கவேண்டும்.

இனி
இரவில் நாம்
உரையாடும் நேரத்தில்
தொலைபேசி ஒளித்து
தலையணை நனைத்திருப்போம்
அறிவுறுத்த, ஆறுதல் சொல்ல, அரவணைக்க
அருகில் நீயிருப்பதாய்
சூன்யத்தில் நானுன்னை
விளிக்கவும் கூடும்!

எதுவெனினும் இன்றே
இறுதி நாளென்பதால்
உன் அழுகை கலந்த சம்மதம்
கேட்க தைரியமின்றி
என்னிலிருந்து உன்வரை நீண்டிருக்கும்
மௌனத்தால் சொல்கிறேன்
“போய் வா என்
பிரிய தோழி!”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.