இதயத்தில் முழ்கி கிடக்கும் அவளின் நினைவுகள் மிதந்து வந்த நேரம் .....
என் இதயம் மட்டும் கனக்கிறது !!
அது கூட சுகமான சுமை தான்.
என்றென்றும் சுகமான சுமைகள் எல்லாம் சில சோகமான நினைவுகளுக்கு தான் சொந்தமா ?
சுமைகளையும் சுகங்களையும் சுமக்கத்தான் வேண்டுமா ?
சுகங்களை விடுத்து சுமைகளை மட்டும் இறக்கத்தான் முயல்கிறேன் ....
எத்தனை முறை இறக்கினாலும் இறங்குவது கண்ணீர் மட்டுமே !
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.