Monday, June 22, 2009

பிரிவின் பிந்தைய கணங்கள்

பிரிவின் பிந்தைய கணங்கள்

கதவிடுக்கின்வழிக் கசியும்
இந்நாளின் புது வெளிச்சங்கள்
சொல்ல விழைந்த ஏதோ ஒன்றையும்
நிராகரித்து விட்ட‌ன
பெருகுமென‌து மௌனங்க‌ள்

என்னைவிடவும் அமைதியாக
இருக்கி்றது இந்த அறை

கதவுகள் திறந்தபடியிருந்தும்
யாதொரு புதுமையும்
நிகழ்ந்துவிடவில்லை

நிர்பந்தங்களேதுமின்றி
தொடரும் தனிமையில்
வலிமிகுந்து சரிகின்றன
அநாவசியமாகிவிட்ட எனது உணர்வுகள்

தயார்படுத்திக் கொள்ள விழைகிறேன்
உனது பிரிவை ஈடுசெய்யும்
ஆதூரமிக்கதொரு தருணத்தை

முடிவில்
ஆறுத‌ல‌ற்று விம்மி அழுத
நேற்றைய இரவை சற்றும்
மொழிபெய‌ர்க்க முடியாமல்
தோல்வியைத் தழுவுகின்றன
இப்பகல் பொழுதுகள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.