எப்போது தொலைத்தோம் ???
நீ இல்லாத
பரிச்சயம் அற்ற பொழுதுகள்
போக மறுக்கிறது என்னை விட்டு...
பத்திர படுத்தாமலே
தீர்ந்து போய் கொண்டு இருக்கின்றன
உனக்கான வார்த்தைகள்
செல்லும் வழி யாவும்
பிரிந்தே விடுகிறது
ஏதோ ஒரு கணத்தில்...
அடித்து வாட்டும் கொடும் குளிரிலும்
வெப்ப பிசுபுசுப்பையே
தருகிறது ஒவ்வரு
தனிமையின் இரவும்....
நமக்கான ஆசைகள் அனைத்தையும்
குத்தகைக்கு எடுத்து,
நிராசையாக்கி தவணை முறையில்
துப்புகிறது கடக்கும்
அத்தனை மணி துளியும்...
ஞாபகம் இருக்கிறதா
எப்போது தொலைத்தோம்
உனக்கான என்னையும்
எனக்கான உன்னையும்...........
Gnan's
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.