Monday, June 22, 2009

இந்த கவிதை என் நண்பிக்கு

இந்த கவிதை என் நண்பிக்கு

இந்த கவிதை என் நண்பிக்கு

நண்பி.........
நட்பு....
சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு
உன்னை காணும் வரை
ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே
அன்பு காட்டும் உலகில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன்
அன்பை எண்ணி வியந்து போகிறேன்....

நண்பி.........
மொழிகளோ....
தூரங்களோ........
வயதோ.......
மற்ற எதுவுமே - நட்பை
எதிர் பார்ப்பதில்லை...
உன்னாலே புரிந்து கொண்டேன்..
என் வாழ்க்கைத் தோட்டத்தில்
எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால்
உன் நட்பைப்போல் எதுவும்
மலர்ந்து மணம் வீசவில்லை
கால வெள்ளத்தில்
சிதறுண்டு போகும் உறவுகளில்
நண்பி.............
தொடர்வாயா
உன் நட்பை இறுதி வரை..........?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.