எனக்கு மட்டும் நீ வேண்டும்
எல்லோரும் இருந்தும் எனக்கு
கிடைக்காத சந்தோசம்.
நீ.. வந்த மறுநாள் தந்தாய்.
நீடிக்குமா.. இல்லை நிலைக்குமா..
என்பதை தேடி தேடி பார்க்கவில்லை
உன்னோடு ஒவ்வொரு நிமிடமும் வாழும் போது
தேடிக்கொண்டு இருக்கின்றேன்.
உன் இதயத்துக்குள் புகுந்து. உனக்கள்
சிரித்து மகிழும் என்னை.
தெரியாது உன்னை புரிந்து கொண்டேன்.
பரவசம் தரும் உன்னை நான் வாழ் நாள் முழுதும்.
பிரியாத வரம் வேண்டி.
நிக்கின்றேன் என் இருகரம் கூப்பி.
பிரிவது என்றால் சொல்லி விடு
என் இதயத்தை முதல் அழித்துவிட
ஏன் என்கின்றாயா..?
சோகத்தையும் வலியையும் ஏமாற்றங்களையும்
சந்தித்த நான் உன் பிரிவோடு மரணிக்க விரும்புகின்றேன்.
எங்கு இருந்தாலும் வாழ்க
என்று என் உதடு மட்டும்
வாழ்த்தினாலும்.
என் உள்ளத்தின் குமுறல்
என்னை கண்ணீர் கடலில் மூழ்கச்செய்யும்.
முகாரி ராகத்தோடு .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.