இந்த கவிதையை எனக்காய் ஒருமுறை படியுங்கள் பிறகு உங்களுக்காய் ஓரு முறை படியுங்கள்.இதில் நான் என்பது, படிக்கும் ஒவ்வொரு இதயத்தையும் குறிக்கும் சொல்,ஏன் எனில் நாம் சாதிக்க பிறந்திருக்கிறோம்.
வாய்ப்பில்லா அறிவாளிகளின்
குவியல் உலகு...
வாய்ப்பை உருவாக்க நான்
ஆம் நான் என்பது அழகே!!
என்னால் முடியாததை
யார் செய்ய இங்கே???
யாரும் தொடவே முடியாத
உயரத்தில் நிற்க போகிறேன்..
யாரும் தரவே முடியா ஒன்றை
நான் தர போகிறேன்!!
என் பெயரை உலகம் உச்சரித்து மகிழும்....
கண்ட என் தாய் மகிழ்வார்...
என் காதல்கள் மகிழும்.....
என் காதலியும் மகிழ்வாள் !!
உலகம் அழியும் வரை அழியா....
பல சுவடுகள் என் பெயர் சொல்லும்..!!
இரவாமலே என்னை இட்டு செல்லும்!!
பசி மறந்த குழந்தைகளின்..
புன்னகையில் நான் வாழ்வேன்!!
வலி துறந்த முதுமைகளின்...
மென்மையில் நான் வாழ்வேன்!!
ஆம் இரவாமலே வாழ்வேன் யாதெனில்,
நான் சாதிக்க பிறந்தவன்..!!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.