**"எங்கே தொலைத்தோம்?" **
அந்தப் பழைய புகைப்படத்தில்
சிரிக்கும் சிறுவர்கள் நாம்தானே?
எங்கே தொலைத்தோம்
அந்த இன்முகத்தை?
எங்கே போயின
சிரிக்கும் கண்களும்
சாந்தம் தவழும் முகமும்
அந்த அப்பவித்தனமும்?
படிக்கப்போன இடத்தில்
பள்ளியில் தொலைத்தோமா?
கல்லூரி களவாடிக்கொண்டதா?
எப்படி வந்தன இத்தனை
இறுக்கமும், சுருக்கமும்?
அறிவு வளர வளர
கள்ளம் வந்து
கண்களில் நிறைந்ததா?
காலச்சாட்டை முதுகிலும், முகத்திலும்
இழுத்த இழுப்பில் இறுகிப் போனதா?
அப்பா, அம்மாவிற்காக ஒன்று,
மனைவி, குழந்தைகளுக்காக ஒன்று,
பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக ஒன்று,
பணியிடத்திற்கென்று ஒன்று,
என்று முகமூடிகளை அணிந்தணிந்து
அந்த முகமூடிகளே முகங்களாக
முற்றிலும் மாறிவிட்டனவா?
என்ன விலை கொடுத்தால்
திரும்பவும் கிடைக்கும்
அந்தப் பழைய முகம்?
Tuesday, January 26, 2010
காதலுக்கு கண்ணீர் அஞ்சலி
சிரித்து பேசி
சிணுங்கியதும்
சில்லென துவங்கிய என் காதல்
சிறகிழந்த பறவையாய் இன்று!
என் வாழ்வில் ஆச்சரிய குறியாய் இருந்து
பின் கேள்வி குறியாய் மாறிய காதலுக்கு
நேற்று வைத்து விட்டேன் முற்று புள்ளி.
காதல் மாயையா இல்லை
எது காதல் என்ற அறியாமையா?
காதலை கொன்ற
கொலை காரி அவள்
இ.பி.கோ வில் இடமில்லையாம்
இரக்க மற்றவளை தண்டிக்க!!
கோபம் இல்லை
பாவமாய் இருக்கிறது அவளை பார்த்தால்…
இதயம் இல்லாதவள் அவள்
இரக்கத்தை எதிர்பார்த்தது என் தவறு
மனிதாபிமானம் உள்ளவன் நான்
மன்னித்து விடுகிறேன் அவளை
வாழ்த்துகிறேன் அவள் வாழ்வு சிறக்க!!
தோல்விதான் எனினும்
சோகமில் லை
சுமை நீங்கியதால்
சுகமே
நேற்று அகால மரணமடைந்த
என் காதலுக்கு
கண்ணீர் அஞ்சலி
என் கடந்த காதல் பயணம்
கடும் தோல்வியில் முடிந்தது
அடுத்த பயணம்
அபார வெற்றி பெற வேண்டிகொள்ளுங்கள்
அவரவர் இஷ்ட தெய்வங்களை
இப்படிக்கு,
நான்...
சிரித்து பேசி
சிணுங்கியதும்
சில்லென துவங்கிய என் காதல்
சிறகிழந்த பறவையாய் இன்று!
என் வாழ்வில் ஆச்சரிய குறியாய் இருந்து
பின் கேள்வி குறியாய் மாறிய காதலுக்கு
நேற்று வைத்து விட்டேன் முற்று புள்ளி.
காதல் மாயையா இல்லை
எது காதல் என்ற அறியாமையா?
காதலை கொன்ற
கொலை காரி அவள்
இ.பி.கோ வில் இடமில்லையாம்
இரக்க மற்றவளை தண்டிக்க!!
கோபம் இல்லை
பாவமாய் இருக்கிறது அவளை பார்த்தால்…
இதயம் இல்லாதவள் அவள்
இரக்கத்தை எதிர்பார்த்தது என் தவறு
மனிதாபிமானம் உள்ளவன் நான்
மன்னித்து விடுகிறேன் அவளை
வாழ்த்துகிறேன் அவள் வாழ்வு சிறக்க!!
தோல்விதான் எனினும்
சோகமில் லை
சுமை நீங்கியதால்
சுகமே
நேற்று அகால மரணமடைந்த
என் காதலுக்கு
கண்ணீர் அஞ்சலி
என் கடந்த காதல் பயணம்
கடும் தோல்வியில் முடிந்தது
அடுத்த பயணம்
அபார வெற்றி பெற வேண்டிகொள்ளுங்கள்
அவரவர் இஷ்ட தெய்வங்களை
இப்படிக்கு,
நான்...
பிரிவின் கணங்கள்.....
காற்றில் அறுந்த மேக
துண்டுகளை போல்
உனக்கும் எனக்குமான
உறவை உடைத்து
செல்கிறது காலம்.....
கோடை வெயிலில் தெறித்து
கிடக்கும் நெல் மணியை
கடத்தி செல்லும் ஊர் குருவியாய்
நம் நினைவை
கொத்தி செல்கிறது மனது..
பசி கொண்ட யானையாய்
கொன்று தின்கிறது
மௌனம்
நமக்கான மணி துளிகளை.....
இல்லாமல் இருக்கும்
கடவுளை போல்
நாம் வாழ்ந்த பக்கங்களை
மற்றும் ஓர் முறை
வாசித்து காட்டுகிறது காதல்.....
ஒற்றை கொம்பில் தொங்கி
நிற்கும் தேன் கூடாய்
பெருகும் கண்ணீரோடு
பரிதவித்து நிற்கிறேன் நான்...
துண்டுகளை போல்
உனக்கும் எனக்குமான
உறவை உடைத்து
செல்கிறது காலம்.....
கோடை வெயிலில் தெறித்து
கிடக்கும் நெல் மணியை
கடத்தி செல்லும் ஊர் குருவியாய்
நம் நினைவை
கொத்தி செல்கிறது மனது..
பசி கொண்ட யானையாய்
கொன்று தின்கிறது
மௌனம்
நமக்கான மணி துளிகளை.....
இல்லாமல் இருக்கும்
கடவுளை போல்
நாம் வாழ்ந்த பக்கங்களை
மற்றும் ஓர் முறை
வாசித்து காட்டுகிறது காதல்.....
ஒற்றை கொம்பில் தொங்கி
நிற்கும் தேன் கூடாய்
பெருகும் கண்ணீரோடு
பரிதவித்து நிற்கிறேன் நான்...
சொல்லாத காதல் ...
உன்மீதான காதல்
கவிதையாய் கசியுமேயானால்
ஒருவேளையது
புன்னகையாகவோ
கண்ணீராகவோ
கோபமாகவோ
பிரசவிக்ககூடும் ..
நீ கொட்டிதீர்க்கும்
மௌனத்தை காட்டிலும்
ரகசியமானதொரு செய்தியை
கொண்டுபோய் சேர்க்கலாம்
சில தருணங்களில்
காலியாக நிரப்பபட்ட காகிதங்கள் ..
எழுதமறந்த கவிதையாக
காற்றோடு கலக்கட்டும்
எனது காதலும்
உனது மௌனமும் .
கவிதையாய் கசியுமேயானால்
ஒருவேளையது
புன்னகையாகவோ
கண்ணீராகவோ
கோபமாகவோ
பிரசவிக்ககூடும் ..
நீ கொட்டிதீர்க்கும்
மௌனத்தை காட்டிலும்
ரகசியமானதொரு செய்தியை
கொண்டுபோய் சேர்க்கலாம்
சில தருணங்களில்
காலியாக நிரப்பபட்ட காகிதங்கள் ..
எழுதமறந்த கவிதையாக
காற்றோடு கலக்கட்டும்
எனது காதலும்
உனது மௌனமும் .
என்னவளைக் காண……..
மனதில் அவள் முகம்
பரவசத்தில் பூரித்தது
என்னோடு இயற்கையும்
புதுத்தோரணம் வழியெலாம் !
சில மரங்களில் பல நிறங்கள்
பல மலர்களில் புது நிறங்கள் !!
பசும்பட்டிலாடும் மலைத்தோழி
சிந்தும் புன்னகையோ நீர்வீழ்ச்சி?
எந்த பிஞ்சுகள் கூட்டம்
பறக்க விட்டது இப்பஞ்சுமேக பட்டங்களை?
எந்த வோவியன் தெளித்தது
இப்பள்ளத்தில் படரும் பசு(ம்)மையை?
பஞ்சபூத இரசம் விதைத்து
அழகை பிரசவித்த தாயவள் யார்?
இளங்குளிர் தென்றலில்
என்னுணர்வு நனைந்தது
செங்கதிரின் ஓரப்பார்வையில்
என்னுணர்வு கிளர்ந்தது
மனங்கொண்ட என்னவள் முகங்காண
மரவிடுக்கில் கிரணங்கள் பாய்ந்தது
இளஞ்சூட்டை ஒற்றியெடுக்க
புது நிழற்படையும் பிறந்தது
சலனமற்ற மனம்
மவுனத்தில் கலந்த பேரானந்தம் !
சில மரங்களில் இளவுயிர்கள் !
பல மலர்களில் புது மணங்கள் !
என் மனைவியைக் காண விரைகிறேன்
பரவசத்தில் பூரித்தது
என்னோடு இயற்கையும்
புதுத்தோரணம் வழியெலாம் !
சில மரங்களில் பல நிறங்கள்
பல மலர்களில் புது நிறங்கள் !!
பசும்பட்டிலாடும் மலைத்தோழி
சிந்தும் புன்னகையோ நீர்வீழ்ச்சி?
எந்த பிஞ்சுகள் கூட்டம்
பறக்க விட்டது இப்பஞ்சுமேக பட்டங்களை?
எந்த வோவியன் தெளித்தது
இப்பள்ளத்தில் படரும் பசு(ம்)மையை?
பஞ்சபூத இரசம் விதைத்து
அழகை பிரசவித்த தாயவள் யார்?
இளங்குளிர் தென்றலில்
என்னுணர்வு நனைந்தது
செங்கதிரின் ஓரப்பார்வையில்
என்னுணர்வு கிளர்ந்தது
மனங்கொண்ட என்னவள் முகங்காண
மரவிடுக்கில் கிரணங்கள் பாய்ந்தது
இளஞ்சூட்டை ஒற்றியெடுக்க
புது நிழற்படையும் பிறந்தது
சலனமற்ற மனம்
மவுனத்தில் கலந்த பேரானந்தம் !
சில மரங்களில் இளவுயிர்கள் !
பல மலர்களில் புது மணங்கள் !
என் மனைவியைக் காண விரைகிறேன்
அம்மா அழகான அர்த்தம்....
அம்மா..!!
நான் முதல் முதல் உச்சரித்த வார்த்தை..!!
கடவுளின் மறுவுருவம்..!!
கருவறையில் கண தூரம் சுமந்தவள்..!!
கடவுளிடம் பிடிக்காதது இது மட்டும்தான்..??
உன்னை வருத்தி என்னை இந்த உலகத்திற்கு தந்திருக்கிறாரே..!!!
இந்த உலகத்தில் நீ வாழும் காலம் வரை
நானும் வாழ வேண்டும்..!!
உன்னை பிரிந்து வாழும் ஒரு நிமிடம் கூட
இந்த உலகத்தில் வேண்டாம்..!!!
உலக அதிசயங்களில் உந்தன் பெயர் இடம்பெறவில்லை..!!
கடவுளின் பெயர்கள் அந்த வரிசையில் இடம் பெற முடியாதே..!!
கவிதை என்று எதையெல்லாமோ எழுதி இருக்கிறேன்..!!
"அம்மா" என்னும் வார்த்தைக்கு இணையான
கவிதை எங்கு உண்டு??
நான் முதல் முதல் உச்சரித்த வார்த்தை..!!
கடவுளின் மறுவுருவம்..!!
கருவறையில் கண தூரம் சுமந்தவள்..!!
கடவுளிடம் பிடிக்காதது இது மட்டும்தான்..??
உன்னை வருத்தி என்னை இந்த உலகத்திற்கு தந்திருக்கிறாரே..!!!
இந்த உலகத்தில் நீ வாழும் காலம் வரை
நானும் வாழ வேண்டும்..!!
உன்னை பிரிந்து வாழும் ஒரு நிமிடம் கூட
இந்த உலகத்தில் வேண்டாம்..!!!
உலக அதிசயங்களில் உந்தன் பெயர் இடம்பெறவில்லை..!!
கடவுளின் பெயர்கள் அந்த வரிசையில் இடம் பெற முடியாதே..!!
கவிதை என்று எதையெல்லாமோ எழுதி இருக்கிறேன்..!!
"அம்மா" என்னும் வார்த்தைக்கு இணையான
கவிதை எங்கு உண்டு??
விடை தேடும் கேள்விகள்...
என் வாழ்கை கணக்கில் நான் கடந்துவிட்டேன் சில பக்கங்கள்..
சில பக்கங்கள் கோலாகலமாய்..
சில பக்கங்கள் அலங்கோலமாய்.!
கடைசி பக்கத்தின் முன் பக்கம் வரை
எல்லா பக்கத்தின் முன் பக்கமும்
பின் பக்கத்தை விட இன்பமாகவே உள்ளது;
பின் பக்கத்தை நினைத்து முன் பக்கத்தை ஏற்பதா..?
அதற்கும் முன் பக்கத்தினை நினைத்து
அப்பக்கத்தையும் வெறுப்பதா..?
இன்று வரை கடந்ததை சோகங்கலென கொள்வதா..?
அல்லது இனி தான் பெரும் சோகமெனில்
இன்று வரை அடைந்ததுதான் இன்பமென கொள்வதா..?
இன்பமே துன்பமென கொள்ள தகுந்தெநெநில்
துன்பத்தை நரகமென கொள்வேனா..?
அவ்வாறெனில் நரகத்தை என்னென்று உரைப்பேன்..??
இன்பமும் துன்பமும் கலந்தே தோன்றுமேனில்
இது வரை தோன்றியிருக்கும் ஒரு சில இன்பமும்
நான் துன்பமாய் கண்டதேனோ..?
விதியின் விதிப்படி எல்லாமே துன்பமென கொள்வது என் மனமோ..?
எனில் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று கூறுவது பிழையோ...?
விதிப்படி நடப்பதே உலகெனில்
மனம் விதியின் போக்கில் செல்லும் அடிமையோ..?
மனம் சொல்வதே நாம் செய்வோமெனில் விதி என்பதே மாயமோ..?
விதி என்பதே மாயமெனில் மரணத்தின் கணக்குதான் என்ன..?
மரணத்திற்கு மட்டும்தான் விதி எனில்
உலகில் வேற்றுமைகள் உருவாவதெப்படி..?
வேற்றுமைக்கு காரணம் மனிதரெனில் அவரின் உள்ளமும் தானே..?
மனசாட்சி எப்பொழுதும் சரியே எனில்
அதை மீற வழி செய்வது விதி தானே..!
பின், மரணத்தின் கணக்கு மட்டும் விதி என்பதில்லையே..!
என் உணர்வுகள் விதியினாலே வகுக்கப்பட்டதா..?
என் உள்ளத்தில் இருந்து தான் எழுவதா..?
அது விதி தானெனில் கள்வனை கள்வனாக்கியது விதியோ..?
விதியின் பெயரால் பாவம் சேருமோ..?
அதில் அவனுக்கு பங்கும் உண்டோ..?
கள்வனாய் மாறுவது அவன் சித்தத்தால் எனில்
விதி என்பதுதான் என்ன..?
என்னை சுற்றி மட்டுமே கேட்ட கேள்விகள்
பொதுவாய் பல கேள்விகளை எழுப்புகிறதே..!
எந்த கேள்விக்கு விடை தேட..?
விடைஉள்ள கேள்விதான் எது..?
எல்லா கேள்விகளுக்கும் விடை இல்லையெனில்
கேள்விகள் மட்டும் எழுவது எவ்வாறு..?
எல்லா கேள்விகளுக்கும் விடை உண்டெனில்
இக்கேள்விகளுக்கு விடை என்ன..?
சில பக்கங்கள் கோலாகலமாய்..
சில பக்கங்கள் அலங்கோலமாய்.!
கடைசி பக்கத்தின் முன் பக்கம் வரை
எல்லா பக்கத்தின் முன் பக்கமும்
பின் பக்கத்தை விட இன்பமாகவே உள்ளது;
பின் பக்கத்தை நினைத்து முன் பக்கத்தை ஏற்பதா..?
அதற்கும் முன் பக்கத்தினை நினைத்து
அப்பக்கத்தையும் வெறுப்பதா..?
இன்று வரை கடந்ததை சோகங்கலென கொள்வதா..?
அல்லது இனி தான் பெரும் சோகமெனில்
இன்று வரை அடைந்ததுதான் இன்பமென கொள்வதா..?
இன்பமே துன்பமென கொள்ள தகுந்தெநெநில்
துன்பத்தை நரகமென கொள்வேனா..?
அவ்வாறெனில் நரகத்தை என்னென்று உரைப்பேன்..??
இன்பமும் துன்பமும் கலந்தே தோன்றுமேனில்
இது வரை தோன்றியிருக்கும் ஒரு சில இன்பமும்
நான் துன்பமாய் கண்டதேனோ..?
விதியின் விதிப்படி எல்லாமே துன்பமென கொள்வது என் மனமோ..?
எனில் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று கூறுவது பிழையோ...?
விதிப்படி நடப்பதே உலகெனில்
மனம் விதியின் போக்கில் செல்லும் அடிமையோ..?
மனம் சொல்வதே நாம் செய்வோமெனில் விதி என்பதே மாயமோ..?
விதி என்பதே மாயமெனில் மரணத்தின் கணக்குதான் என்ன..?
மரணத்திற்கு மட்டும்தான் விதி எனில்
உலகில் வேற்றுமைகள் உருவாவதெப்படி..?
வேற்றுமைக்கு காரணம் மனிதரெனில் அவரின் உள்ளமும் தானே..?
மனசாட்சி எப்பொழுதும் சரியே எனில்
அதை மீற வழி செய்வது விதி தானே..!
பின், மரணத்தின் கணக்கு மட்டும் விதி என்பதில்லையே..!
என் உணர்வுகள் விதியினாலே வகுக்கப்பட்டதா..?
என் உள்ளத்தில் இருந்து தான் எழுவதா..?
அது விதி தானெனில் கள்வனை கள்வனாக்கியது விதியோ..?
விதியின் பெயரால் பாவம் சேருமோ..?
அதில் அவனுக்கு பங்கும் உண்டோ..?
கள்வனாய் மாறுவது அவன் சித்தத்தால் எனில்
விதி என்பதுதான் என்ன..?
என்னை சுற்றி மட்டுமே கேட்ட கேள்விகள்
பொதுவாய் பல கேள்விகளை எழுப்புகிறதே..!
எந்த கேள்விக்கு விடை தேட..?
விடைஉள்ள கேள்விதான் எது..?
எல்லா கேள்விகளுக்கும் விடை இல்லையெனில்
கேள்விகள் மட்டும் எழுவது எவ்வாறு..?
எல்லா கேள்விகளுக்கும் விடை உண்டெனில்
இக்கேள்விகளுக்கு விடை என்ன..?
என்னவள் என்னிடம் காதலை சொன்னாள்...
என்னவள்
என்னிடம் காதலை சொன்னாள்!!!
அவள் காதலை!!!
வேறு ஒருவனை காதலிக்கிறேன் என்று!!!
நான் சிரிக்க தெரியாமல் சிரித்தேன்!!!
நடிக்க தெரியாமல் நடித்தேன்!!!
நான் நடிப்பதை அவள் கண்டுபிடித்துவிடுவாள் என்று பயந்தேன்!!!
அந்த ஒரு நொடியில் என் கண்களுக்கும்,இதயத்திற்கும்
ஒரு யுத்தமே நடத்தி விட்டேன்!!!
என் கண்களில் கண்ணீர் வர கூடாது என்று!!!
நான் அழுது விடு வேனோ என்ற துடித்தேன்!!!
காதலிப்பதால் நான் அழகுச் சிலை ஆக தெரிகிறேன் என்று சொன்னாள்!!!
காதலில் தோற்றதால் இப்போது
நான் நடை பிணமாகத் தெரிகிறேன்!!!
என்னிடம் காதலை சொன்னாள்!!!
அவள் காதலை!!!
வேறு ஒருவனை காதலிக்கிறேன் என்று!!!
நான் சிரிக்க தெரியாமல் சிரித்தேன்!!!
நடிக்க தெரியாமல் நடித்தேன்!!!
நான் நடிப்பதை அவள் கண்டுபிடித்துவிடுவாள் என்று பயந்தேன்!!!
அந்த ஒரு நொடியில் என் கண்களுக்கும்,இதயத்திற்கும்
ஒரு யுத்தமே நடத்தி விட்டேன்!!!
என் கண்களில் கண்ணீர் வர கூடாது என்று!!!
நான் அழுது விடு வேனோ என்ற துடித்தேன்!!!
காதலிப்பதால் நான் அழகுச் சிலை ஆக தெரிகிறேன் என்று சொன்னாள்!!!
காதலில் தோற்றதால் இப்போது
நான் நடை பிணமாகத் தெரிகிறேன்!!!
நட்புக்கல்ல...
பழகிய நெஞ்சங்கள்;
பிரிகின்ற நேரங்கள்;
எண்ணத்தில் நெஞ்சத்தில்
எண்ணற்ற பாரங்கள்;
எட்டு மணி நேரம்
வீட்டை விட்டு பிரிந்தோம்!
நண்பர் கூட்டம் கை கொடுக்க
வருந்தும் நெஞ்சம் சிரித்தோம்!
சில நேரம் படிப்பு
பல நேரம் துடிப்பு
அழகான கோவ நடிப்பு
அந்த வாழ்க்கையில் எதனை மிடுக்கு!
சிறு சிறு கோவங்கள்;
சிறு சிறு கர்வங்கள்;
சிறு சிறு சண்டைகள்;
-உறவாடினோம்...
மீண்டும் மீண்டும் சேர்கையில்
எங்கள் நட்பின் உறவை இரும்பாக்கினோம்
கரும்பான நட்பு;
குறும்பான காலம்;
கலங்காத நினைவு..
சுகங்கள் மறைந்து சுமைகள் தோன்றும்
நட்பின் கண்ணில் கலங்கும் கண்ணீர்
சந்தித்த இடங்கள்
நடந்திட்ட தடங்கல்
சுவடாய் அமையும் எதிர்காலத்தில்!
புகைப்படமும் கையெழுத்தும்
நீங்காத இடம் பிடிக்கும்
புத்தகத்தில் மட்டுமல்ல எங்கள் நெஞ்சத்திலும்..
கல்லான நெஞ்சமும்
கண்ணீர் கசியும்
பிரிவான நேரம்..!
என்றாவதொருநாள் நண்பனை எதிர்கான
கேட்ட குரலோ! என நெஞ்சம் விழி காண
நண்பனே! என உள்ளம் உறவாட
கண்டு; பேசி; சில நேரங்கள் பின்னர்
மீண்டும் அவரவர் பாதையில்!
குழந்தையென மாற நெஞ்சம் கேட்கும்
நண்பனின் தொலை கண்கள் எதிர்நோக்கும்
இக்காலம் இனி என்றும் வருமோ என விழிகளில் நீர் தேங்கும்
இதோ பிரியும் நேரம்!
நண்பர்களுக்கு மட்டுமே
நட்புக்கல்ல...
பிரிகின்ற நேரங்கள்;
எண்ணத்தில் நெஞ்சத்தில்
எண்ணற்ற பாரங்கள்;
எட்டு மணி நேரம்
வீட்டை விட்டு பிரிந்தோம்!
நண்பர் கூட்டம் கை கொடுக்க
வருந்தும் நெஞ்சம் சிரித்தோம்!
சில நேரம் படிப்பு
பல நேரம் துடிப்பு
அழகான கோவ நடிப்பு
அந்த வாழ்க்கையில் எதனை மிடுக்கு!
சிறு சிறு கோவங்கள்;
சிறு சிறு கர்வங்கள்;
சிறு சிறு சண்டைகள்;
-உறவாடினோம்...
மீண்டும் மீண்டும் சேர்கையில்
எங்கள் நட்பின் உறவை இரும்பாக்கினோம்
கரும்பான நட்பு;
குறும்பான காலம்;
கலங்காத நினைவு..
சுகங்கள் மறைந்து சுமைகள் தோன்றும்
நட்பின் கண்ணில் கலங்கும் கண்ணீர்
சந்தித்த இடங்கள்
நடந்திட்ட தடங்கல்
சுவடாய் அமையும் எதிர்காலத்தில்!
புகைப்படமும் கையெழுத்தும்
நீங்காத இடம் பிடிக்கும்
புத்தகத்தில் மட்டுமல்ல எங்கள் நெஞ்சத்திலும்..
கல்லான நெஞ்சமும்
கண்ணீர் கசியும்
பிரிவான நேரம்..!
என்றாவதொருநாள் நண்பனை எதிர்கான
கேட்ட குரலோ! என நெஞ்சம் விழி காண
நண்பனே! என உள்ளம் உறவாட
கண்டு; பேசி; சில நேரங்கள் பின்னர்
மீண்டும் அவரவர் பாதையில்!
குழந்தையென மாற நெஞ்சம் கேட்கும்
நண்பனின் தொலை கண்கள் எதிர்நோக்கும்
இக்காலம் இனி என்றும் வருமோ என விழிகளில் நீர் தேங்கும்
இதோ பிரியும் நேரம்!
நண்பர்களுக்கு மட்டுமே
நட்புக்கல்ல...
பிரியவும் நினைத்தாயோ தோழியே...!
தோழியே!
உன் முகம் என் கண்ணிலும்
உன் நினைவென் நெஞ்சிலும்
சுமப்பதினால் தான்
இன்னமும் சொல்கிறேன்
நான் உன்னை பிரியவில்லை என்று....
கண்மூடி காண்கிறேன்
நம் பள்ளி நாட்களை...
கண்களை திறந்ததும் ஏனோ தெரியவில்லை
என் சுவாசக் காற்றில் படிந்து விட்ட உன் நினைவுகள்
கண்களினோரம் தன் ஈரப் பதத்தினை சின்னமிட்டது..
மனதில் எதோ ஒரு கனம்
அதை எப்படி சொல்வேன் உனக்கு...?
பிரிந்திடவும் நினைத்தாயோ என்னை...?
பள்ளி கால முதல் தோழி நீ...!
என் மனதில் பட்ட முதல் சிநேகம் நீ..!
உன்னுடன் நகர்ந்திட்ட அந்த நாட்கள்..
நான் எப்படி திரும்ப பெற்றிடுவேன்...?
இன்முகமாய் நான் கண்ட உன் முகம்
உன் நட்பினிலே நான் கண்ட உன் உள்ளம்
இன்று...சற்று தள்ளி நின்று என்னை பார்ப்பது ஏனோ..?
விலகியிருப்பதென சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல..
அன்பு தோழியே..!
அது என் இதய துடிப்பினில் நீ ஏற்றிவிட்ட கூறிய வாள்
எடுக்கவும் முடியவில்லை....
வலியினை பொறுக்கவும் முடியவில்லை...
உன் முகம் என் கண்ணிலும்
உன் நினைவென் நெஞ்சிலும்
சுமப்பதினால் தான்
இன்னமும் சொல்கிறேன்
நான் உன்னை பிரியவில்லை என்று....
கண்மூடி காண்கிறேன்
நம் பள்ளி நாட்களை...
கண்களை திறந்ததும் ஏனோ தெரியவில்லை
என் சுவாசக் காற்றில் படிந்து விட்ட உன் நினைவுகள்
கண்களினோரம் தன் ஈரப் பதத்தினை சின்னமிட்டது..
மனதில் எதோ ஒரு கனம்
அதை எப்படி சொல்வேன் உனக்கு...?
பிரிந்திடவும் நினைத்தாயோ என்னை...?
பள்ளி கால முதல் தோழி நீ...!
என் மனதில் பட்ட முதல் சிநேகம் நீ..!
உன்னுடன் நகர்ந்திட்ட அந்த நாட்கள்..
நான் எப்படி திரும்ப பெற்றிடுவேன்...?
இன்முகமாய் நான் கண்ட உன் முகம்
உன் நட்பினிலே நான் கண்ட உன் உள்ளம்
இன்று...சற்று தள்ளி நின்று என்னை பார்ப்பது ஏனோ..?
விலகியிருப்பதென சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல..
அன்பு தோழியே..!
அது என் இதய துடிப்பினில் நீ ஏற்றிவிட்ட கூறிய வாள்
எடுக்கவும் முடியவில்லை....
வலியினை பொறுக்கவும் முடியவில்லை...
என் ஹீரோ.....
சிறுவயது முதல்
என் சினிமா ஹீரோ
நீதான்
எதையும் செய்தாய்
எனக்காக
என் சிரிப்பை
காணும் நொடிக்க்காக
உன்னோடு நான்
உலகையே
சுற்றினாலும்
அடுத்த் ரவுண்டும்
அலுக்காமல்
கூட்டிச்செல்வாய்
சக்கரை இனிமையாக
நீ விளக்கும் கற்பனை
உலகை இனிமையாக்கி
எனக்கு தரும் விற்பனை
என் முதுகெலும்பு
நிமிர்ந்த்ததும்
மிதிவண்டி
நக்ர்ந்ததும்
உன்னால் தானே
ஆலமரம் ஆயிரம்
விழிதிருக்கலாம்..
உன்க்கு நான்
விழாமல் நிறுத்த
என் கடமையை
மறந்தாலும்
நீ கண்டிப்பாக
உதவி கேள் ..
தேர்வுகள் எத்தனை
கடந்து வந்தாலும்
தந்தை சொல் தான்
மந்திரம் எனக்கு.
என் சினிமா ஹீரோ
நீதான்
எதையும் செய்தாய்
எனக்காக
என் சிரிப்பை
காணும் நொடிக்க்காக
உன்னோடு நான்
உலகையே
சுற்றினாலும்
அடுத்த் ரவுண்டும்
அலுக்காமல்
கூட்டிச்செல்வாய்
சக்கரை இனிமையாக
நீ விளக்கும் கற்பனை
உலகை இனிமையாக்கி
எனக்கு தரும் விற்பனை
என் முதுகெலும்பு
நிமிர்ந்த்ததும்
மிதிவண்டி
நக்ர்ந்ததும்
உன்னால் தானே
ஆலமரம் ஆயிரம்
விழிதிருக்கலாம்..
உன்க்கு நான்
விழாமல் நிறுத்த
என் கடமையை
மறந்தாலும்
நீ கண்டிப்பாக
உதவி கேள் ..
தேர்வுகள் எத்தனை
கடந்து வந்தாலும்
தந்தை சொல் தான்
மந்திரம் எனக்கு.
மறக்கவில்லை மன்னித்துவிடு......
கரம் பிடிக்க காத்திருந்த என்னிடம் இனி நாம்
மணமுடிக்க முடியாது என்றாய்
கண்ணீரில் அஸ்த்தமிக்கும் முன் உன் கண்கள்
"நீ இறந்துவிடு" என்றோர் வரம் வீசி மறைந்தது
நீயோ கண் மூடி சபித்தாய்
"என்னை மறந்துவிடு" என்று
காதலி தன் கடைக்கண்ணசைவுக்கு கல்லையும் கரைப்பவன்
கடைசி கண்ணசைவுக்கு தன்னையே உருக்குவான்
நம்மைப் பிரித்திடலாம் என எண்ணினாய் போலும்
விழியிலே நுழைந்து
மனதிலே திரிந்து
உயிரிலே கலந்துள்ளாய்
ஒற்றை வரியில் அணு அணுவாய் சிதைத்தாய்
ஒவ்வொரு அணுவின் கடைசி சுற்றுப்பாதை வரை சுழன்று எனை வதைத்தாய்
உன்னை பிரிக்க நினைத்த ஒவ்வொரு முறையும்
இன்னும் ஒரு ஹிரோஷிமாவாய் என் உடல் மரித்தது - உயிர் பிரியாமல்
மறக்கவில்லை மன்னித்துவிடு
மணமுடிக்க முடியாது என்றாய்
கண்ணீரில் அஸ்த்தமிக்கும் முன் உன் கண்கள்
"நீ இறந்துவிடு" என்றோர் வரம் வீசி மறைந்தது
நீயோ கண் மூடி சபித்தாய்
"என்னை மறந்துவிடு" என்று
காதலி தன் கடைக்கண்ணசைவுக்கு கல்லையும் கரைப்பவன்
கடைசி கண்ணசைவுக்கு தன்னையே உருக்குவான்
நம்மைப் பிரித்திடலாம் என எண்ணினாய் போலும்
விழியிலே நுழைந்து
மனதிலே திரிந்து
உயிரிலே கலந்துள்ளாய்
ஒற்றை வரியில் அணு அணுவாய் சிதைத்தாய்
ஒவ்வொரு அணுவின் கடைசி சுற்றுப்பாதை வரை சுழன்று எனை வதைத்தாய்
உன்னை பிரிக்க நினைத்த ஒவ்வொரு முறையும்
இன்னும் ஒரு ஹிரோஷிமாவாய் என் உடல் மரித்தது - உயிர் பிரியாமல்
மறக்கவில்லை மன்னித்துவிடு
நினைவுகள்........
ஏழு ஜென்ம ஆசைகள் ஏன்?
ஒரே ஒரு ஜனனத்தில் !
விதிமுறைகள் பல விளக்கப்பட்டு
வழிமுறைகளே இல்லா நியாயங்கள்!
கசக்கப்பட்ட உள்ளங்களால் !
கசந்து போன நினைவுகள் !_சோலை
குயிலின் சோகம் கேட்டு ,
சோர்ந்து போன தென்றல்கள் !
விலக்கப்பட்ட விளக்கங்களால் !
முடிந்து போன அத்தியாயங்கள்
புதைக்கப்பட்ட பிறகும்!
சுவாசம் தேடும் உள்ளங்கள்!
ஒரே ஒரு ஜனனத்தில் !
விதிமுறைகள் பல விளக்கப்பட்டு
வழிமுறைகளே இல்லா நியாயங்கள்!
கசக்கப்பட்ட உள்ளங்களால் !
கசந்து போன நினைவுகள் !_சோலை
குயிலின் சோகம் கேட்டு ,
சோர்ந்து போன தென்றல்கள் !
விலக்கப்பட்ட விளக்கங்களால் !
முடிந்து போன அத்தியாயங்கள்
புதைக்கப்பட்ட பிறகும்!
சுவாசம் தேடும் உள்ளங்கள்!
அன்புள்ள என் கவிதைக்கு....
அன்புள்ள என் கவிதைக்கு,
உன்மேல் நான் காதல் கொண்டதால்!
ஏடும் எழுதுகோலும் காணிக்கையாய் படைத்து,
வணங்கி உன்னை வரவேற்றேன்.
எனக்கு தரிசனம் தரமறுத்தாய்.
தனிமையில் எதிர்பாராத நேரத்தில்
அணை உடைத்துவரும் வெள்ளம்போல் வந்து
என் மனதை மிதக்கவிட்டு அதிர்ச்சி அளித்தாய்!
அவ்வெள்ளத்தில் நீச்சலடித்து
ஏடும் எழுதுகோலும் எங்கே தேடுவேன்?
முயற்சித்தேன் கைகூடவில்லை.
நான் அசுரனானதால் நீ வரும் நேரம்
உன்னை சிறைப் பிடிக்கவே!
என் ஆயுதான்களாக ஏடும் எழுதுகோலும்
தயாராக என்னுடனே வைத்துப் பழகுகிறேன்.
உன்னை சிறைபிடித்துவிடுவேன் என்பதால்
நீ வராமல் இருந்துவிடாதே!
உன்மேல் நான் கொண்ட காதலினாலே
எப்போதும் நீ என்னுடனே இருக்கவே.
உன்னை கேட்கிறேன்
மனதில் உதித்த நீ என்றும் என்
கனவிலும் துணையிருப்பாய் என!
உன் விருப்பத்தை தெருவிக்க
மீண்டும் வருவாய் என்ற எதிர்பார்ப்புடன்
உன்மேல் நான் காதல் கொண்டதால்!
ஏடும் எழுதுகோலும் காணிக்கையாய் படைத்து,
வணங்கி உன்னை வரவேற்றேன்.
எனக்கு தரிசனம் தரமறுத்தாய்.
தனிமையில் எதிர்பாராத நேரத்தில்
அணை உடைத்துவரும் வெள்ளம்போல் வந்து
என் மனதை மிதக்கவிட்டு அதிர்ச்சி அளித்தாய்!
அவ்வெள்ளத்தில் நீச்சலடித்து
ஏடும் எழுதுகோலும் எங்கே தேடுவேன்?
முயற்சித்தேன் கைகூடவில்லை.
நான் அசுரனானதால் நீ வரும் நேரம்
உன்னை சிறைப் பிடிக்கவே!
என் ஆயுதான்களாக ஏடும் எழுதுகோலும்
தயாராக என்னுடனே வைத்துப் பழகுகிறேன்.
உன்னை சிறைபிடித்துவிடுவேன் என்பதால்
நீ வராமல் இருந்துவிடாதே!
உன்மேல் நான் கொண்ட காதலினாலே
எப்போதும் நீ என்னுடனே இருக்கவே.
உன்னை கேட்கிறேன்
மனதில் உதித்த நீ என்றும் என்
கனவிலும் துணையிருப்பாய் என!
உன் விருப்பத்தை தெருவிக்க
மீண்டும் வருவாய் என்ற எதிர்பார்ப்புடன்
ஏதோ ஒரு இரைச்சல்......
இனம் புரியா கலவரம் என்னுள் வெடிக்கிறது.
வேற்று கிரகத்தில் வீழ்ந்திட்டேன்
விழிநீரின்றி அழுதிட்டேன்.
அடி வயிறு குமுறல் கேட்டு
ஆனந்தப்படும் ஜீவன்கள்...
என்னுலகத்தில் கண்ட இன்பம்
எப்போது காண்பேனோ?
இருள் உலகத்தின் ஈரைந்து கால
ராஜா நான்.
விழியோ! செவியோ! வேலை கொண்ட வேளை இல்லை.
நாழிகைக்கு உட்பட்ட பொழுதில் உலக வளம்
நிகழ்த்திக்காட்டும் நிகரில்லா வீரன் நான்
நிகராக சொல்வதற்கு நிழல் கூட எனக்கில்லை.
அடியேன் மட்டும் இன்புற்றிருக்க
ஆண்டவன் ஈன்ற அற்புத உலகம்.
என்னுலகத்தில் நான் மச்சாவதாரம்
ஓய்ச்சல் இல்ல நீச்சல் .
உதடுகள் கூட உயராமல் ஊட்டச்சத்து
உடல் வந்து சேரும்.
ஆதாம் உடையில் நானிருந்தும்
அக்னியோ, வருணனோ, என்னை
அச்சப்படுத்தியதில்லை
பத்து திங்கள் பவனி வந்த என்னை
கத்தி முனையில் கிரகம் கடத்தி விட்டனர்
வெண்ணிற ஆடை இட்ட வஞ்சகர்கள்.
என்றாலும் நெஞ்சார்ந்த நன்றி
இத்தனை காலம் நான் ஆட்சி செய்த
பவனியை மேனியாய் தாங்கிய
அன்னையை காண அச்சாரமிட்டதற்கு.....
தாய் எனும் உலகிருந்து வந்த
செய் எனும் புது வாசி நான்,
ஏன் அலறல் கேட்டு
ஆனந்தபடுவோர் சுற்றம் நிற்க
என் அசைவுகள் அனைத்திலும்
ஆனந்தபடுகிறாள்
ஏன் அகிலம் சுமந்த அரசி
அம்மா......!!!!!!!
வேற்று கிரகத்தில் வீழ்ந்திட்டேன்
விழிநீரின்றி அழுதிட்டேன்.
அடி வயிறு குமுறல் கேட்டு
ஆனந்தப்படும் ஜீவன்கள்...
என்னுலகத்தில் கண்ட இன்பம்
எப்போது காண்பேனோ?
இருள் உலகத்தின் ஈரைந்து கால
ராஜா நான்.
விழியோ! செவியோ! வேலை கொண்ட வேளை இல்லை.
நாழிகைக்கு உட்பட்ட பொழுதில் உலக வளம்
நிகழ்த்திக்காட்டும் நிகரில்லா வீரன் நான்
நிகராக சொல்வதற்கு நிழல் கூட எனக்கில்லை.
அடியேன் மட்டும் இன்புற்றிருக்க
ஆண்டவன் ஈன்ற அற்புத உலகம்.
என்னுலகத்தில் நான் மச்சாவதாரம்
ஓய்ச்சல் இல்ல நீச்சல் .
உதடுகள் கூட உயராமல் ஊட்டச்சத்து
உடல் வந்து சேரும்.
ஆதாம் உடையில் நானிருந்தும்
அக்னியோ, வருணனோ, என்னை
அச்சப்படுத்தியதில்லை
பத்து திங்கள் பவனி வந்த என்னை
கத்தி முனையில் கிரகம் கடத்தி விட்டனர்
வெண்ணிற ஆடை இட்ட வஞ்சகர்கள்.
என்றாலும் நெஞ்சார்ந்த நன்றி
இத்தனை காலம் நான் ஆட்சி செய்த
பவனியை மேனியாய் தாங்கிய
அன்னையை காண அச்சாரமிட்டதற்கு.....
தாய் எனும் உலகிருந்து வந்த
செய் எனும் புது வாசி நான்,
ஏன் அலறல் கேட்டு
ஆனந்தபடுவோர் சுற்றம் நிற்க
என் அசைவுகள் அனைத்திலும்
ஆனந்தபடுகிறாள்
ஏன் அகிலம் சுமந்த அரசி
அம்மா......!!!!!!!
இயற்கையும்---நானும்
இயற்கையிடம்
ஒரு
கேள்வி..............?
செயற்கையின்
சாயல் இல்லாமல்
இருப்பது
இயற்கையா?
இல்லை,
இல்லை
இயல்பாக
இருப்பது மட்டுமே
என்றது
இயற்கை.
உன்னிடம்
இன்னொரு
கேள்வி.........?
செயற்கை என்பது.........
இயல்புக்கு
புறம்பானது
அனைத்தும்
செயற்கையே!
அப்படி என்றால்
செயற்கை என்பது
இயற்கையின்
சாயல் இல்லாமல்
இருப்பது தானே!
உன்னிடம்
ஒரே ஒரு
கேள்வி......
என
இயற்கை
என்னைக்
கேட்டது?
“ம்”
என்றேன்
ஆணவத்துடன்.....
நீ
இயற்கையா?
அன்றி
செயற்கையா?
நான்
இயற்கை தானே?
இதில் என்ன
சந்தேகம்?
என்றேன்..........
அப்படி என்றால்
என்னின்
பாஷைகள்
உனக்கு ஏன்
புரியாமல்
போகிறது?
இயற்கையோடு
ஒன்றி
வாழ்ந்த
நீ
மட்டுமே
அதைவிட்டு
தொலைதூரம்
சென்றுவிட்டாய்.
கேட்டால்
ஆறாம் அறிவு
என்கிறாய்...
அந்த
அறிவின்
அடிப்படை
அகத்தின் வழி
நோக்குதல்
தானே!
ஏனோ
அதைவிட்டு விட்டு
ஆழ்கடல்
ஆராய்ச்சிவரை
சென்று
கிடைக்காமல்
அணுவைத்
துளைத்து
அதனுள்ளே
அவனியை
புகுத்த நினைக்கும்
உன்னறிவைக்
கண்டு
நான்
வியக்கிறேன்....
அதே நேரத்தில்
விளைவின்
விபரீதத்தை
உணரமுடியாத
உன் அறிவு
வேடிக்கையாகவும்
இருக்கிறது..........
ஓரறிவு
ஈரறிவு
மூன்றறிவு
உயிரிகள்
கூட
என்னின்
சீற்றத்தை
உணர்ந்து
தற்காத்துக்
கொள்கிறது.
ஆறறிவு
என்று
அகமகிழும்
நீ மட்டுமே
பகுத்தறிவு
என்று
பறைசாற்றுகிறாய்....
தொலைந்து போ!
என்று
உன்னை
தொலைக்கவும்
மனமில்லை......
படைப்பின்
பரிணாமத்தை
மட்டுமே
வைத்துக் கொண்டு
செயற்கையின்
சாயலுக்கு
சான்றாய்
திகழும்
உன்னை
நான் இல்லை
என்பேனா..........?
நீ தான்
நான்
நான் தான்
நீ.
ஒரு
கேள்வி..............?
செயற்கையின்
சாயல் இல்லாமல்
இருப்பது
இயற்கையா?
இல்லை,
இல்லை
இயல்பாக
இருப்பது மட்டுமே
என்றது
இயற்கை.
உன்னிடம்
இன்னொரு
கேள்வி.........?
செயற்கை என்பது.........
இயல்புக்கு
புறம்பானது
அனைத்தும்
செயற்கையே!
அப்படி என்றால்
செயற்கை என்பது
இயற்கையின்
சாயல் இல்லாமல்
இருப்பது தானே!
உன்னிடம்
ஒரே ஒரு
கேள்வி......
என
இயற்கை
என்னைக்
கேட்டது?
“ம்”
என்றேன்
ஆணவத்துடன்.....
நீ
இயற்கையா?
அன்றி
செயற்கையா?
நான்
இயற்கை தானே?
இதில் என்ன
சந்தேகம்?
என்றேன்..........
அப்படி என்றால்
என்னின்
பாஷைகள்
உனக்கு ஏன்
புரியாமல்
போகிறது?
இயற்கையோடு
ஒன்றி
வாழ்ந்த
நீ
மட்டுமே
அதைவிட்டு
தொலைதூரம்
சென்றுவிட்டாய்.
கேட்டால்
ஆறாம் அறிவு
என்கிறாய்...
அந்த
அறிவின்
அடிப்படை
அகத்தின் வழி
நோக்குதல்
தானே!
ஏனோ
அதைவிட்டு விட்டு
ஆழ்கடல்
ஆராய்ச்சிவரை
சென்று
கிடைக்காமல்
அணுவைத்
துளைத்து
அதனுள்ளே
அவனியை
புகுத்த நினைக்கும்
உன்னறிவைக்
கண்டு
நான்
வியக்கிறேன்....
அதே நேரத்தில்
விளைவின்
விபரீதத்தை
உணரமுடியாத
உன் அறிவு
வேடிக்கையாகவும்
இருக்கிறது..........
ஓரறிவு
ஈரறிவு
மூன்றறிவு
உயிரிகள்
கூட
என்னின்
சீற்றத்தை
உணர்ந்து
தற்காத்துக்
கொள்கிறது.
ஆறறிவு
என்று
அகமகிழும்
நீ மட்டுமே
பகுத்தறிவு
என்று
பறைசாற்றுகிறாய்....
தொலைந்து போ!
என்று
உன்னை
தொலைக்கவும்
மனமில்லை......
படைப்பின்
பரிணாமத்தை
மட்டுமே
வைத்துக் கொண்டு
செயற்கையின்
சாயலுக்கு
சான்றாய்
திகழும்
உன்னை
நான் இல்லை
என்பேனா..........?
நீ தான்
நான்
நான் தான்
நீ.
உயிரில்லா வார்த்தைகள்.....
நேரம்
இரண்டை கடந்து
மூன்றை தொட்டுவிட
துணிந்திருந்தது!
நினைவுகளை
பிரேத பரிசோதனை செய்தபடி
எனதறையில் நான் !
பெத்த பாசத்திற்கு
வாய் கிழிய
கத்திகொண்டிருக்கிறாள் அம்மா...
சாப்பிட வா என்று !!!
அவளுக்காய்
எழுந்து சென்று அமர்கிறேன்!
வெள்ளை சோறும்
சாம்பாரும் என
உணவு பரிமாறப்பட்டு இருந்தது!
பிசைந்து கொண்டிருக்கையில்
எதேச்சையாக
அவள் அண்ணனின்
திருமண பத்திரிக்கை மீது
பார்வை விழுகிறது!
பார்வை அதிலே பதிய
நினைவு
தடம் மாறியது!
அவள்
அன்பின் கண்டிப்போடு
எனை நோக்கி கேட்கிறாள்...
"
மணியாச்சுல?
ஏன் இன்னும் சாப்பிடல ?" என்று -
இரண்டாண்டுகளுக்கு முன்
கல்லூரியில்!!!
கடந்த
இரண்டாண்டு கால பிரிவு
பரிவோடு
கறுப்பு வெள்ளையில்
தன் உணவை பரிமாற,
எழுந்து கை கழுவிவிட்டு
மீண்டும்
எனதறையில் முடங்குகிறேன்!
அம்மா
இன்னமும் கத்திகொண்டிருப்பது
செவியில் மட்டும் விழுகிறது!
இரண்டை கடந்து
மூன்றை தொட்டுவிட
துணிந்திருந்தது!
நினைவுகளை
பிரேத பரிசோதனை செய்தபடி
எனதறையில் நான் !
பெத்த பாசத்திற்கு
வாய் கிழிய
கத்திகொண்டிருக்கிறாள் அம்மா...
சாப்பிட வா என்று !!!
அவளுக்காய்
எழுந்து சென்று அமர்கிறேன்!
வெள்ளை சோறும்
சாம்பாரும் என
உணவு பரிமாறப்பட்டு இருந்தது!
பிசைந்து கொண்டிருக்கையில்
எதேச்சையாக
அவள் அண்ணனின்
திருமண பத்திரிக்கை மீது
பார்வை விழுகிறது!
பார்வை அதிலே பதிய
நினைவு
தடம் மாறியது!
அவள்
அன்பின் கண்டிப்போடு
எனை நோக்கி கேட்கிறாள்...
"
மணியாச்சுல?
ஏன் இன்னும் சாப்பிடல ?" என்று -
இரண்டாண்டுகளுக்கு முன்
கல்லூரியில்!!!
கடந்த
இரண்டாண்டு கால பிரிவு
பரிவோடு
கறுப்பு வெள்ளையில்
தன் உணவை பரிமாற,
எழுந்து கை கழுவிவிட்டு
மீண்டும்
எனதறையில் முடங்குகிறேன்!
அம்மா
இன்னமும் கத்திகொண்டிருப்பது
செவியில் மட்டும் விழுகிறது!
"காதலியில்லாக் காதலன்"
என்னடா இது!
நமக்குத்தான் காதலியே இல்லையே,
அப்புறம் எப்படிப் பிறக்கிறது
இந்தக் கவிதை மாதிரியெல்லாம்?
நினைத்துக் கொண்டே
பைக்கை நெருங்கினேன்
வருவது கண்டு ஓடிய
குழந்தையின் பயம் அழகு.
வெளியே எடுத்து
உதைக்கும் போது எதிரே
பெட்டிக்கடைப் பெண்ணின்
புன்னகை அழகு.
சென்றது ஆபீஸ் நோக்கி,
போட்டியின் வாலிபர்கள்
பைக்கை முறுக்கியதும்
எழும் சத்தம் அழகு.
சப்வேயைக் கடகும்போது
முன்னால் செல்லும்
பின்னால் உள்ள துப்பட்டா
பறப்பது அழகு.
சிக்னல் இல்லா சந்திப்பு,
நாலா புறமும் வரும்
அவசரத்தில் பிறந்தவர்களின்
முட்டல் அழகு.
சிக்னலில் யூடர்ன்,
போலீஸ்காரர் பிடிப்பாரோ?
பயந்துகொண்டே திரும்பும்
புது பைக் அழகு.
அப்பாடா! சிக்னல் எல்லாம்
கடந்து விட்டேன் என்று
நிம்மதியாய் செல்லும்
அகன்ற சாலை அழகு.
ஆபீஸ் நுழையும்போது
குட்மார்னிங் அண்ணா
சிரிப்போடு சொல்லும்
தோழி அழகு.
ரெண்டும் நல்லாத்தான் இருக்கும்,
நான் செய்ததுதான் சரி
அடித்துக் கொள்ளும் நண்பர்களின்
போட்டி அழகு.
மாலை நேரம் முடிவு
வீட்டிற்கு செல்லப்போகும்
நண்பர்கள் முகத்தில்
உற்சாகம் அழகு.
வெளியே வந்தால்
பைக் சீட்டில் வரைந்த
ஆபாயில் போன்ற
காக்கா எச்சம் அழகு.
அனைவரும் விரைவாய்
வீட்டிற்குப் பறக்க
அதைவிட அவசரமாய்
மங்கும் வானம் அழகு.
செல்லும் வழியில்
கேட்காமலேயே சிகரெட்
எடுத்துவைக்கும் அண்ணாச்சி
கடையில் பரபரப்பு அழகு.
இரவு உணவு மெஸ்ஸில்
உனக்கு தோசதானப்பா?
கேட்கும் ஆயாவின்
சுறுசுறுப்பு அழகு.
தூங்கும் முன் அழைத்து
ஏண்டா போன் பண்ணல?
கேட்கும் அம்மாவின்
பாசம் அழகு.
விளக்கை அணைக்கும் முன்
பவர்கட், ஏற்றி வைத்த
மெழுகுவர்த்தி ஒளியின்
ஆட்டம் அழகு.
அனலுடன் புழுக்கம்
தூங்க முடியாவிட்டாலும்
தேவையில்லாமல் உதித்த
இந்தச் சிந்தனை அழகு.
காதலியே இல்லின்ன!
எதத்தாண்டா காதலிக்கல நீ?
கேட்கும் மனதின்
நக்கல் அழகு.
எல்லாவற்றையும் காதலிக்கிறேன்
பதிலுக்கு காதலிப்பவளைத் தவிர.
யாருமே காதலிக்காத என்
வாழ்க்கை அழகு....
நமக்குத்தான் காதலியே இல்லையே,
அப்புறம் எப்படிப் பிறக்கிறது
இந்தக் கவிதை மாதிரியெல்லாம்?
நினைத்துக் கொண்டே
பைக்கை நெருங்கினேன்
வருவது கண்டு ஓடிய
குழந்தையின் பயம் அழகு.
வெளியே எடுத்து
உதைக்கும் போது எதிரே
பெட்டிக்கடைப் பெண்ணின்
புன்னகை அழகு.
சென்றது ஆபீஸ் நோக்கி,
போட்டியின் வாலிபர்கள்
பைக்கை முறுக்கியதும்
எழும் சத்தம் அழகு.
சப்வேயைக் கடகும்போது
முன்னால் செல்லும்
பின்னால் உள்ள துப்பட்டா
பறப்பது அழகு.
சிக்னல் இல்லா சந்திப்பு,
நாலா புறமும் வரும்
அவசரத்தில் பிறந்தவர்களின்
முட்டல் அழகு.
சிக்னலில் யூடர்ன்,
போலீஸ்காரர் பிடிப்பாரோ?
பயந்துகொண்டே திரும்பும்
புது பைக் அழகு.
அப்பாடா! சிக்னல் எல்லாம்
கடந்து விட்டேன் என்று
நிம்மதியாய் செல்லும்
அகன்ற சாலை அழகு.
ஆபீஸ் நுழையும்போது
குட்மார்னிங் அண்ணா
சிரிப்போடு சொல்லும்
தோழி அழகு.
ரெண்டும் நல்லாத்தான் இருக்கும்,
நான் செய்ததுதான் சரி
அடித்துக் கொள்ளும் நண்பர்களின்
போட்டி அழகு.
மாலை நேரம் முடிவு
வீட்டிற்கு செல்லப்போகும்
நண்பர்கள் முகத்தில்
உற்சாகம் அழகு.
வெளியே வந்தால்
பைக் சீட்டில் வரைந்த
ஆபாயில் போன்ற
காக்கா எச்சம் அழகு.
அனைவரும் விரைவாய்
வீட்டிற்குப் பறக்க
அதைவிட அவசரமாய்
மங்கும் வானம் அழகு.
செல்லும் வழியில்
கேட்காமலேயே சிகரெட்
எடுத்துவைக்கும் அண்ணாச்சி
கடையில் பரபரப்பு அழகு.
இரவு உணவு மெஸ்ஸில்
உனக்கு தோசதானப்பா?
கேட்கும் ஆயாவின்
சுறுசுறுப்பு அழகு.
தூங்கும் முன் அழைத்து
ஏண்டா போன் பண்ணல?
கேட்கும் அம்மாவின்
பாசம் அழகு.
விளக்கை அணைக்கும் முன்
பவர்கட், ஏற்றி வைத்த
மெழுகுவர்த்தி ஒளியின்
ஆட்டம் அழகு.
அனலுடன் புழுக்கம்
தூங்க முடியாவிட்டாலும்
தேவையில்லாமல் உதித்த
இந்தச் சிந்தனை அழகு.
காதலியே இல்லின்ன!
எதத்தாண்டா காதலிக்கல நீ?
கேட்கும் மனதின்
நக்கல் அழகு.
எல்லாவற்றையும் காதலிக்கிறேன்
பதிலுக்கு காதலிப்பவளைத் தவிர.
யாருமே காதலிக்காத என்
வாழ்க்கை அழகு....
நீ என்பது... நீ மட்டும்தான்...
இன்று உனக்கு பிறந்தநாள்...
அதிகாலை சூரியன் தொடங்கி..
அத்தனையும் அழகாயிருக்கிறது.
.
உனக்காக எழுத அமர்ந்தாலே...
சோகமாய் ஒதுங்கி கொள்கிறது...
என் முந்தைய கவிதைகள்.
.
என் முதல் 18 வருடங்களில்
நீயில்லை...
பின் வந்த மூன்றாண்டுகளில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்..
என் உலகை நிறைத்தவள் நீ.
.
உன் அன்பை
நீ சொன்னதில்லை...
என் அன்பை பற்றியும்..
நீ கேட்டதில்லை...
ஏனெனில் அன்பென்பது...
சொல்லி புரிவதில்லை என...
புரிந்தவள் நீ.
.
உன் கோபம்..
நான் தாங்கியதில்லை...
என் கோபமோ...
உன்னிடம் பலிப்பதேயில்லை.
என் கோபம் கொன்றுபோடும்
குட்டிபிசாசு நீ.
.
தங்கைகள்...
உலகின் குறும்புக்கார தேவதைகள்...
என உணர்த்தியவள் நீ.
.
மௌனம் போர்த்தியிருந்த
என் பாதைகளில்...
இசை வழியவிட்டவள் நீ.
.
யாருடைய உலகையும்
நொடியில் அழகாக்கும்
மிக அழகானவள் நீ.
.
என் கவிதைகளில் வரும்
தேவதைகள் அத்தனையும்...
உன் சாயல் போர்த்தியே உலவுகின்றன..
தேவதைகளின் தேவதை நீ.
.
என்னில் நிரந்தரமாய் தங்கிவிட்ட..
புன்னகை நீ.
நான் எத்தனை எழுதினாலும்...
முடியாத கவிதை நீ..
.
உலக தேவதைகளில்..
தங்க தேவதை நீ...
என் உலகை அழகாக்கும்..
தங்கை தேவதை நீ.
அதிகாலை சூரியன் தொடங்கி..
அத்தனையும் அழகாயிருக்கிறது.
.
உனக்காக எழுத அமர்ந்தாலே...
சோகமாய் ஒதுங்கி கொள்கிறது...
என் முந்தைய கவிதைகள்.
.
என் முதல் 18 வருடங்களில்
நீயில்லை...
பின் வந்த மூன்றாண்டுகளில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்..
என் உலகை நிறைத்தவள் நீ.
.
உன் அன்பை
நீ சொன்னதில்லை...
என் அன்பை பற்றியும்..
நீ கேட்டதில்லை...
ஏனெனில் அன்பென்பது...
சொல்லி புரிவதில்லை என...
புரிந்தவள் நீ.
.
உன் கோபம்..
நான் தாங்கியதில்லை...
என் கோபமோ...
உன்னிடம் பலிப்பதேயில்லை.
என் கோபம் கொன்றுபோடும்
குட்டிபிசாசு நீ.
.
தங்கைகள்...
உலகின் குறும்புக்கார தேவதைகள்...
என உணர்த்தியவள் நீ.
.
மௌனம் போர்த்தியிருந்த
என் பாதைகளில்...
இசை வழியவிட்டவள் நீ.
.
யாருடைய உலகையும்
நொடியில் அழகாக்கும்
மிக அழகானவள் நீ.
.
என் கவிதைகளில் வரும்
தேவதைகள் அத்தனையும்...
உன் சாயல் போர்த்தியே உலவுகின்றன..
தேவதைகளின் தேவதை நீ.
.
என்னில் நிரந்தரமாய் தங்கிவிட்ட..
புன்னகை நீ.
நான் எத்தனை எழுதினாலும்...
முடியாத கவிதை நீ..
.
உலக தேவதைகளில்..
தங்க தேவதை நீ...
என் உலகை அழகாக்கும்..
தங்கை தேவதை நீ.
என் அன்பு அம்மா...
உன்
கர்ப்ப நிலத்தில் விதைக்கப்பட்டு
உதிரத்தில் ஊறிப்போய்
வெறும் தேகப் பையில்...
உன்
உயிரின் ஒரு துளியை
நிரப்பிக் கொண்டு...
உன்
கனவு மூட்டையின்
ஒரு கனவாய்...
உன்
தொப்புள் கொடியை
வேராய்ப் பிடித்துக் கொண்டு...
ஜனனத்தின் கதவைத் திறந்து
ஜகத்தின் கருங் குழிக்குள்
ஒளிந்துக்கிடக்கும்
மரண விளக்குக்கு
திரித் தூண்ட
வந்த மனிதர்களுள்
நானும் ஒருவனாய்....
விம்மி அழுதுக் கொண்டே
உன்னிலிருந்து
நழுவி விழுந்ததும்
ஆறுதலாய் இருந்தது
உன் புன்னகைதான்....
உன் முகம் தான்
நான் கண்ட முதல் அதிசயம்....
மெல்லிய நீவல்களை
தந்த உன் விரல்கள்
புன்னகைச் சுரக்கும்
மந்திரக் கோல்கள்
என்று எண்ணி
இறுகப் பற்றிக்கொண்டு
மனிதனாய் வளர்ந்தும்....
உணர்வுகளை புதைத்துக் கொண்டு
ஊமையாய் நிற்கும்
மரம் போல் ஆனேன்-இன்று
ஓய்ந்து கிடக்கும்
உன்னைப் பார்க்கையில்...
உடலில் ஒட்டிக்கிடக்கும்
மிச்ச உயிரையும்
பிழிந்து துளித் துளியாய்
கசியும் உன்
கண்ணீரில் கரைந்து
கொண்டிருக்கிறேன் நான்…..
நீ சோறூட்டி விடும் போது
என் வாயிலிருந்து
தப்பிச் சென்று நாடி
குழியில் சிக்கும் அந்த
ஒரு பருக்கையும்
“எனக்கு பசியாற்றும்”-என்று
உன் வாய்க்கு கொண்டு செல்லும்
அந்த தெய்வீக விரல்களை
மெல்ல பற்றிக் கொண்டு
ஆறுதலாய் சொல்கிறேன்
“உனக்கு நூறாயுள்”என்று…
பொய்யென்றாலும் கூட
இறந்துக் கிடக்கும்
அந்த அழகியக் கைகளை
உயர்த்தி என் கன்னங்கள்
தடவி "உன்ன விட்டுட்டு
போயிடமாட்டேண்டா என்
கண்ணு"என்று நீ சொல்லும்
போது என்னை தூங்க வைத்த
மார் மீது விழுந்து
கதறி அழுவேன்....
அந்த
மரண விளக்கை
அழித்து விடென்று இறைவனுடன்
மன்றாடிக்
கொண்டிருக்கும் போதே...
உன் இதயத் துடிப்புகளை
எதிர் காலம் விழுங்க....
என் தலைக் கோதி
மறித்த உன் கைகளுக்குள்
மீண்டும் குழந்தையாகி.....
விம்மி
அழுகிறேன்....
என் அன்பு அம்மா....!!
கர்ப்ப நிலத்தில் விதைக்கப்பட்டு
உதிரத்தில் ஊறிப்போய்
வெறும் தேகப் பையில்...
உன்
உயிரின் ஒரு துளியை
நிரப்பிக் கொண்டு...
உன்
கனவு மூட்டையின்
ஒரு கனவாய்...
உன்
தொப்புள் கொடியை
வேராய்ப் பிடித்துக் கொண்டு...
ஜனனத்தின் கதவைத் திறந்து
ஜகத்தின் கருங் குழிக்குள்
ஒளிந்துக்கிடக்கும்
மரண விளக்குக்கு
திரித் தூண்ட
வந்த மனிதர்களுள்
நானும் ஒருவனாய்....
விம்மி அழுதுக் கொண்டே
உன்னிலிருந்து
நழுவி விழுந்ததும்
ஆறுதலாய் இருந்தது
உன் புன்னகைதான்....
உன் முகம் தான்
நான் கண்ட முதல் அதிசயம்....
மெல்லிய நீவல்களை
தந்த உன் விரல்கள்
புன்னகைச் சுரக்கும்
மந்திரக் கோல்கள்
என்று எண்ணி
இறுகப் பற்றிக்கொண்டு
மனிதனாய் வளர்ந்தும்....
உணர்வுகளை புதைத்துக் கொண்டு
ஊமையாய் நிற்கும்
மரம் போல் ஆனேன்-இன்று
ஓய்ந்து கிடக்கும்
உன்னைப் பார்க்கையில்...
உடலில் ஒட்டிக்கிடக்கும்
மிச்ச உயிரையும்
பிழிந்து துளித் துளியாய்
கசியும் உன்
கண்ணீரில் கரைந்து
கொண்டிருக்கிறேன் நான்…..
நீ சோறூட்டி விடும் போது
என் வாயிலிருந்து
தப்பிச் சென்று நாடி
குழியில் சிக்கும் அந்த
ஒரு பருக்கையும்
“எனக்கு பசியாற்றும்”-என்று
உன் வாய்க்கு கொண்டு செல்லும்
அந்த தெய்வீக விரல்களை
மெல்ல பற்றிக் கொண்டு
ஆறுதலாய் சொல்கிறேன்
“உனக்கு நூறாயுள்”என்று…
பொய்யென்றாலும் கூட
இறந்துக் கிடக்கும்
அந்த அழகியக் கைகளை
உயர்த்தி என் கன்னங்கள்
தடவி "உன்ன விட்டுட்டு
போயிடமாட்டேண்டா என்
கண்ணு"என்று நீ சொல்லும்
போது என்னை தூங்க வைத்த
மார் மீது விழுந்து
கதறி அழுவேன்....
அந்த
மரண விளக்கை
அழித்து விடென்று இறைவனுடன்
மன்றாடிக்
கொண்டிருக்கும் போதே...
உன் இதயத் துடிப்புகளை
எதிர் காலம் விழுங்க....
என் தலைக் கோதி
மறித்த உன் கைகளுக்குள்
மீண்டும் குழந்தையாகி.....
விம்மி
அழுகிறேன்....
என் அன்பு அம்மா....!!
அவள் புனிதமானவள்.......
காதலித்துப்பார் கவிதை வரும்
என்றார்கள்.........!
யாரைக் காதலிக்கவேண்டுமென்று சொல்லவில்லை
அதனால் நான் கவிதையைக் காதலித்தேன்!
கவிதையும் வந்தது அதற்குமேல்
அவள் மேல் காதலும் வந்தது..........!
என்னவளைக் குறை கூறாதீர்
தாங்கமாட்டேன் ...........!
என்னைக் குறை கூறுங்கள்
திருத்தியபடியே.............
என் காதலை உயத்திக்கொள்கிறேன்!
ஏனனில் அவள் புனிதமானவள்.......!
என்றார்கள்.........!
யாரைக் காதலிக்கவேண்டுமென்று சொல்லவில்லை
அதனால் நான் கவிதையைக் காதலித்தேன்!
கவிதையும் வந்தது அதற்குமேல்
அவள் மேல் காதலும் வந்தது..........!
என்னவளைக் குறை கூறாதீர்
தாங்கமாட்டேன் ...........!
என்னைக் குறை கூறுங்கள்
திருத்தியபடியே.............
என் காதலை உயத்திக்கொள்கிறேன்!
ஏனனில் அவள் புனிதமானவள்.......!
அப்பா..........
பள்ளிக்கூடத்துக்கு
போக அடம் பிடிச்சப்ப
அடிச்சி போக வைச்ச
கம்மாகரையில
பச்ங்களோட குளிச்சப்ப
விரட்டி விரட்டி அடிச்ச
கிரிக்கெட்
விளையாட போனப்ப
பேட்டை வெட்டி என்னைய எரிய விட்ட
ஊர்
சுத்த போன என்ன
வெயில்ல முட்டி போட வச்ச
வேலை
சரிய செய்யலைனு
முதுகுல குச்சியால கோடு போட்ட
எல்லம்
அப்ப வலிக்கல
இப்ப வலிக்குது
உன்ன பிரிஞ்ச பிறகு(உன் பிரிவினில்)
போக அடம் பிடிச்சப்ப
அடிச்சி போக வைச்ச
கம்மாகரையில
பச்ங்களோட குளிச்சப்ப
விரட்டி விரட்டி அடிச்ச
கிரிக்கெட்
விளையாட போனப்ப
பேட்டை வெட்டி என்னைய எரிய விட்ட
ஊர்
சுத்த போன என்ன
வெயில்ல முட்டி போட வச்ச
வேலை
சரிய செய்யலைனு
முதுகுல குச்சியால கோடு போட்ட
எல்லம்
அப்ப வலிக்கல
இப்ப வலிக்குது
உன்ன பிரிஞ்ச பிறகு(உன் பிரிவினில்)
அந்த நாட்கள்...
வெள்ளி பார்த்து விழித்தெழுந்து
சுள்ளி நெருப்பில் குளிர்காய்ந்து
கிணற்றில் நீந்தி விளையாடித்
களித்த நாட்கள் இனி வருமா?
கொடுக்காப்புளி பழம் பறித்து
குழுவாய்த் தின்ற நாட்களெல்ளாம்
கொட்டிக் கொடுத்து அழைத்தாலும்
கும்பிட்டாலும் இனிவருமா?
பாரவண்டிய்ன் பின்னாலே
புத்தகப் பையை மாட்டி விட்டு
நிலவு நாட்களில் வீடு வந்து
விளையாடிய நாட்கள் இனி வருமா?
ஏரிக்கரையில் விளையாடி
ஏழெட்டு முறை படம் பார்த்த
அந்த நாட்கள் இனிவருமா?
நகர வாழ்க்கை மோகத்தில்
சுகமாய் வாழப் பழகிவிட்டோம்
நடந்து வந்த வழி மறந்தொம்
நலியும் ஊரை மறந்து விட்டோம்!
சுள்ளி நெருப்பில் குளிர்காய்ந்து
கிணற்றில் நீந்தி விளையாடித்
களித்த நாட்கள் இனி வருமா?
கொடுக்காப்புளி பழம் பறித்து
குழுவாய்த் தின்ற நாட்களெல்ளாம்
கொட்டிக் கொடுத்து அழைத்தாலும்
கும்பிட்டாலும் இனிவருமா?
பாரவண்டிய்ன் பின்னாலே
புத்தகப் பையை மாட்டி விட்டு
நிலவு நாட்களில் வீடு வந்து
விளையாடிய நாட்கள் இனி வருமா?
ஏரிக்கரையில் விளையாடி
ஏழெட்டு முறை படம் பார்த்த
அந்த நாட்கள் இனிவருமா?
நகர வாழ்க்கை மோகத்தில்
சுகமாய் வாழப் பழகிவிட்டோம்
நடந்து வந்த வழி மறந்தொம்
நலியும் ஊரை மறந்து விட்டோம்!
அந்த நாட்கள்...
வெள்ளி பார்த்து விழித்தெழுந்து
சுள்ளி நெருப்பில் குளிர்காய்ந்து
கிணற்றில் நீந்தி விளையாடித்
களித்த நாட்கள் இனி வருமா?
கொடுக்காப்புளி பழம் பறித்து
குழுவாய்த் தின்ற நாட்களெல்ளாம்
கொட்டிக் கொடுத்து அழைத்தாலும்
கும்பிட்டாலும் இனிவருமா?
பாரவண்டிய்ன் பின்னாலே
புத்தகப் பையை மாட்டி விட்டு
நிலவு நாட்களில் வீடு வந்து
விளையாடிய நாட்கள் இனி வருமா?
ஏரிக்கரையில் விளையாடி
ஏழெட்டு முறை படம் பார்த்த
அந்த நாட்கள் இனிவருமா?
நகர வாழ்க்கை மோகத்தில்
சுகமாய் வாழப் பழகிவிட்டோம்
நடந்து வந்த வழி மறந்தொம்
நலியும் ஊரை மறந்து விட்டோம்!
சுள்ளி நெருப்பில் குளிர்காய்ந்து
கிணற்றில் நீந்தி விளையாடித்
களித்த நாட்கள் இனி வருமா?
கொடுக்காப்புளி பழம் பறித்து
குழுவாய்த் தின்ற நாட்களெல்ளாம்
கொட்டிக் கொடுத்து அழைத்தாலும்
கும்பிட்டாலும் இனிவருமா?
பாரவண்டிய்ன் பின்னாலே
புத்தகப் பையை மாட்டி விட்டு
நிலவு நாட்களில் வீடு வந்து
விளையாடிய நாட்கள் இனி வருமா?
ஏரிக்கரையில் விளையாடி
ஏழெட்டு முறை படம் பார்த்த
அந்த நாட்கள் இனிவருமா?
நகர வாழ்க்கை மோகத்தில்
சுகமாய் வாழப் பழகிவிட்டோம்
நடந்து வந்த வழி மறந்தொம்
நலியும் ஊரை மறந்து விட்டோம்!
அந்த நாட்கள்...
வெள்ளி பார்த்து விழித்தெழுந்து
சுள்ளி நெருப்பில் குளிர்காய்ந்து
கிணற்றில் நீந்தி விளையாடித்
களித்த நாட்கள் இனி வருமா?
கொடுக்காப்புளி பழம் பறித்து
குழுவாய்த் தின்ற நாட்களெல்ளாம்
கொட்டிக் கொடுத்து அழைத்தாலும்
கும்பிட்டாலும் இனிவருமா?
பாரவண்டிய்ன் பின்னாலே
புத்தகப் பையை மாட்டி விட்டு
நிலவு நாட்களில் வீடு வந்து
விளையாடிய நாட்கள் இனி வருமா?
ஏரிக்கரையில் விளையாடி
ஏழெட்டு முறை படம் பார்த்த
அந்த நாட்கள் இனிவருமா?
நகர வாழ்க்கை மோகத்தில்
சுகமாய் வாழப் பழகிவிட்டோம்
நடந்து வந்த வழி மறந்தொம்
நலியும் ஊரை மறந்து விட்டோம்!
சுள்ளி நெருப்பில் குளிர்காய்ந்து
கிணற்றில் நீந்தி விளையாடித்
களித்த நாட்கள் இனி வருமா?
கொடுக்காப்புளி பழம் பறித்து
குழுவாய்த் தின்ற நாட்களெல்ளாம்
கொட்டிக் கொடுத்து அழைத்தாலும்
கும்பிட்டாலும் இனிவருமா?
பாரவண்டிய்ன் பின்னாலே
புத்தகப் பையை மாட்டி விட்டு
நிலவு நாட்களில் வீடு வந்து
விளையாடிய நாட்கள் இனி வருமா?
ஏரிக்கரையில் விளையாடி
ஏழெட்டு முறை படம் பார்த்த
அந்த நாட்கள் இனிவருமா?
நகர வாழ்க்கை மோகத்தில்
சுகமாய் வாழப் பழகிவிட்டோம்
நடந்து வந்த வழி மறந்தொம்
நலியும் ஊரை மறந்து விட்டோம்!
முதல் காதல் கடிதம்.....
விழியால் இதயம் கவர்ந்தவளுக்கு
எளிதாய் இதயம் இழந்தவன் எழுதுகிறேன்.....
இது வரையில் எழுதி பழக்கமில்லாத
கடிதம் என்பதால் ஒரு வித
பதட்டத்தோடு தொடர்கிறேன்......
பாசம் கொட்டி எழுதுவதால்
பல இடங்களில் வார்த்தைகள் அழிந்திருக்கும்...
அழிந்த வார்த்தையின் பொருள்
நான் சொல்லாமலே உனக்கு புரிந்திருக்கும்...
திசை எங்கிலும் தெரியும் உன் முகத்தை
என்னால் மறக்க முடியவில்லை....
துருவி துருவி... நீ கேட்ட போதும் கூட.....
காதலை என் மனதுக்கு சொல்ல தெரியவில்லை.....
மனதார உன்னை நினைக்கிறேன்...
ஆனாலும் சொல்லாமல்
மனதுக்குள்ளே மறைக்கிறேன்....
கருவை சுமக்கும் தாய் கூட....
பத்து மாதத்தில் இறக்கி வைப்பாள்
அந்த சுகமான சுமையை...!!!!!
காதலை சுமக்கும் இதயம்
காதலியிடம் சொல்ல மறுப்பதால்
நித்தமும் குளமாக்குது இமையை..!!!!
வாச மலர் பறித்து வந்து
நேசம் சொல்லவா..????
இல்லை வான் நிலவை அழைத்து
வந்து தூது சொல்லவா?????
தெரியாமல் புரியாமல்
அலை பாயுது மனம்......
அதனால் தான் காதல் கடிதம் ஒன்று
எழுதுகிறேன் இன்றைய தினம்.....
எனக்காக ஆரமித்து... உனக்காக எழுதி.....
நமக்காக முடித்து......
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.....
நீ வரும் பாதையில் காதலை சொல்ல..!!!
எளிதாய் இதயம் இழந்தவன் எழுதுகிறேன்.....
இது வரையில் எழுதி பழக்கமில்லாத
கடிதம் என்பதால் ஒரு வித
பதட்டத்தோடு தொடர்கிறேன்......
பாசம் கொட்டி எழுதுவதால்
பல இடங்களில் வார்த்தைகள் அழிந்திருக்கும்...
அழிந்த வார்த்தையின் பொருள்
நான் சொல்லாமலே உனக்கு புரிந்திருக்கும்...
திசை எங்கிலும் தெரியும் உன் முகத்தை
என்னால் மறக்க முடியவில்லை....
துருவி துருவி... நீ கேட்ட போதும் கூட.....
காதலை என் மனதுக்கு சொல்ல தெரியவில்லை.....
மனதார உன்னை நினைக்கிறேன்...
ஆனாலும் சொல்லாமல்
மனதுக்குள்ளே மறைக்கிறேன்....
கருவை சுமக்கும் தாய் கூட....
பத்து மாதத்தில் இறக்கி வைப்பாள்
அந்த சுகமான சுமையை...!!!!!
காதலை சுமக்கும் இதயம்
காதலியிடம் சொல்ல மறுப்பதால்
நித்தமும் குளமாக்குது இமையை..!!!!
வாச மலர் பறித்து வந்து
நேசம் சொல்லவா..????
இல்லை வான் நிலவை அழைத்து
வந்து தூது சொல்லவா?????
தெரியாமல் புரியாமல்
அலை பாயுது மனம்......
அதனால் தான் காதல் கடிதம் ஒன்று
எழுதுகிறேன் இன்றைய தினம்.....
எனக்காக ஆரமித்து... உனக்காக எழுதி.....
நமக்காக முடித்து......
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.....
நீ வரும் பாதையில் காதலை சொல்ல..!!!
Monday, January 25, 2010
தாயன்பைத் தேடி....
தாயன்பைத் தேடி....
------------------------------------------------------------------------------------
என் மூன்றரைவயதில்
என் நெற்றியில் ஒன்று
என் இடதுகன்னத்தில் ஒன்று
என் வலதுகன்னத்தில் ஒன்று
என வாஞ்சையோடு
நீ கொடுத்த மூன்று முத்தங்கள்
நினைவுகளாய் இன்னமும்
என் நியுரான்களில்
கண்ணீரோடு கலந்திருக்கிறது!
நான் சிரித்தபோது
நீ சிரித்தாய்!
நான் அழுதபோது
நீ அழுதாய்!!
உன் உணர்வுகளை மறந்து
என் உணர்வுகளை மட்டுமே
உன் உலகமாக நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!
என் செவிலித்தாயான
தமிழன்னையை எனக்கு
முதன்முதலில் கற்றுக்கொடுத்த
என் தமிழாசான்
என் தாயே...
நீ தான்!!
இலக்கணம் படித்ததில்லை! - உனக்கு
தலைக்கணமும் பிடித்ததில்லை!! - thamizh
இலக்கியம் படித்ததில்லை! - உனக்கென
இலக்குகள் எதுவுமில்லை!!
நீ கற்றுக்கொடுத்த
தமிழ்மொழியால்
உன் மகனான நான் - தமிழ்
இலக்கியத்தில் மூழ்கிக்கொண்டிருப்பதை
பார் அம்மா...!!
பல ஆண்டுகளாய்
நம்மிருவரையும் பிரித்துவைத்தே
வேடிக்கை பார்க்கிறது
காலம்!
பிணம்தின்னும் கழுகுகளைப்போலவே
பணம்பண்ணும் எந்திரங்களாய்
மாற்றிவிட்டது காலம்!
பசிதூக்கத்தை மறக்கவைத்து
பாசத்தை துறக்கவைத்து
உணர்வுகளை இழக்கவைத்து
உறவுகளை தொலைக்கவைத்து
மனிதநேயத்தை மறக்கவைத்து
மரக்கட்டைகள் போல
மாற்றிவிட்டது காலம்!!
மீசை முளைத்தபின்னும் - முகத்தில்
முடிமுளைத்தபின்னும்
உருவமது மாறியபின்னும் - என்
பருவமது மாறியபின்னும்
கலப்படமில்லாத தாயபபாலைபபோன்ற
பரிசுத்தமான உனன்பைத்தேடும்
மூன்றரைவயது பாலகன் நான்!!
------------------------------------------------------------------------------------
என் மூன்றரைவயதில்
என் நெற்றியில் ஒன்று
என் இடதுகன்னத்தில் ஒன்று
என் வலதுகன்னத்தில் ஒன்று
என வாஞ்சையோடு
நீ கொடுத்த மூன்று முத்தங்கள்
நினைவுகளாய் இன்னமும்
என் நியுரான்களில்
கண்ணீரோடு கலந்திருக்கிறது!
நான் சிரித்தபோது
நீ சிரித்தாய்!
நான் அழுதபோது
நீ அழுதாய்!!
உன் உணர்வுகளை மறந்து
என் உணர்வுகளை மட்டுமே
உன் உலகமாக நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!
என் செவிலித்தாயான
தமிழன்னையை எனக்கு
முதன்முதலில் கற்றுக்கொடுத்த
என் தமிழாசான்
என் தாயே...
நீ தான்!!
இலக்கணம் படித்ததில்லை! - உனக்கு
தலைக்கணமும் பிடித்ததில்லை!! - thamizh
இலக்கியம் படித்ததில்லை! - உனக்கென
இலக்குகள் எதுவுமில்லை!!
நீ கற்றுக்கொடுத்த
தமிழ்மொழியால்
உன் மகனான நான் - தமிழ்
இலக்கியத்தில் மூழ்கிக்கொண்டிருப்பதை
பார் அம்மா...!!
பல ஆண்டுகளாய்
நம்மிருவரையும் பிரித்துவைத்தே
வேடிக்கை பார்க்கிறது
காலம்!
பிணம்தின்னும் கழுகுகளைப்போலவே
பணம்பண்ணும் எந்திரங்களாய்
மாற்றிவிட்டது காலம்!
பசிதூக்கத்தை மறக்கவைத்து
பாசத்தை துறக்கவைத்து
உணர்வுகளை இழக்கவைத்து
உறவுகளை தொலைக்கவைத்து
மனிதநேயத்தை மறக்கவைத்து
மரக்கட்டைகள் போல
மாற்றிவிட்டது காலம்!!
மீசை முளைத்தபின்னும் - முகத்தில்
முடிமுளைத்தபின்னும்
உருவமது மாறியபின்னும் - என்
பருவமது மாறியபின்னும்
கலப்படமில்லாத தாயபபாலைபபோன்ற
பரிசுத்தமான உனன்பைத்தேடும்
மூன்றரைவயது பாலகன் நான்!!
என் உயிர்க்கலந்த உறவே.....
எண்ணங்களில் ஒரு வித விரிசல்...
என்னவென்றே புரியாத ஒரு மௌனம்....
நெஞ்சுக்குள் நெலிகிறது ஒரு சோகம்...
அதனால்தானோ என்னவோ....
இதயத்தில் ஒரு வித பாரம்......
இறக்கி வைக்க தெரியவில்லை...
யாரிடம் சொல்லவென்றும் புரியவில்லை.....
என் சோகம் பரிமாற உனையன்றி யாருமில்லை.....
ஆனால் உன்னிடமே சொல்வதற்கு
வழி ஏனோ தெரியவில்லை....
வலியோடு வருகிறேன்.....
உன் பாசமென்ற நங்கூரம் தேடி....!!!!
நாளெல்லாம் வருடிக்கொடு....
நயமாக பேசிவிடு.....
நிலை மாறிய மனதுக்கு
நீ ஒன்றே ஆறுதல்...!!!!
என் மௌனம் கலைக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்..!!!!!!
என்னை மீண்டும் பழைய நிலைக்கு
கொண்டு செல்ல உன்னால் மட்டுமே முடியும்....!!!!!
சோகம் சுமந்த நெஞ்சோடும்....
கண்ணீர் சுமந்த கண்களோடும்....
உன் நிழல் தேடி வருகிறேன்......
எனக்கான அன்பு உள்ளமே.......
உன் தோள் மீது எனை சாய்த்து...!!!!!!!
சோகத்தை போக்கிவிடு.... மீண்டும் என்
வாழ்வை சுகமாக மாற்றிக்கொடு..!!!!!!
உன் அன்பான வார்த்தை கேட்டால்...
அல்லிப்பூவாய் என் முகம் மாறும்...!!!!!
ஆதரவாய் நீ பேச... என் அத்துனை
துன்பமும் அகன்றோடும்..!!!!!
அந்த ஒரு நம்பிக்கையிலே...
உன் அன்பை தேடிவரும்...
உன்னை புரிந்து கொண்ட ஜீவன் இது...!!!
என்னவென்றே புரியாத ஒரு மௌனம்....
நெஞ்சுக்குள் நெலிகிறது ஒரு சோகம்...
அதனால்தானோ என்னவோ....
இதயத்தில் ஒரு வித பாரம்......
இறக்கி வைக்க தெரியவில்லை...
யாரிடம் சொல்லவென்றும் புரியவில்லை.....
என் சோகம் பரிமாற உனையன்றி யாருமில்லை.....
ஆனால் உன்னிடமே சொல்வதற்கு
வழி ஏனோ தெரியவில்லை....
வலியோடு வருகிறேன்.....
உன் பாசமென்ற நங்கூரம் தேடி....!!!!
நாளெல்லாம் வருடிக்கொடு....
நயமாக பேசிவிடு.....
நிலை மாறிய மனதுக்கு
நீ ஒன்றே ஆறுதல்...!!!!
என் மௌனம் கலைக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்..!!!!!!
என்னை மீண்டும் பழைய நிலைக்கு
கொண்டு செல்ல உன்னால் மட்டுமே முடியும்....!!!!!
சோகம் சுமந்த நெஞ்சோடும்....
கண்ணீர் சுமந்த கண்களோடும்....
உன் நிழல் தேடி வருகிறேன்......
எனக்கான அன்பு உள்ளமே.......
உன் தோள் மீது எனை சாய்த்து...!!!!!!!
சோகத்தை போக்கிவிடு.... மீண்டும் என்
வாழ்வை சுகமாக மாற்றிக்கொடு..!!!!!!
உன் அன்பான வார்த்தை கேட்டால்...
அல்லிப்பூவாய் என் முகம் மாறும்...!!!!!
ஆதரவாய் நீ பேச... என் அத்துனை
துன்பமும் அகன்றோடும்..!!!!!
அந்த ஒரு நம்பிக்கையிலே...
உன் அன்பை தேடிவரும்...
உன்னை புரிந்து கொண்ட ஜீவன் இது...!!!
மறையாத நினைவுகள்....
நிமிடங்களை கடக்க
நிகழ் காலத்தையும்
கடந்த காலத்தையும்
துணைக்கழைக்கிறேன்!
இமைகளை இணைத்து
நகங்களை இரையாக்குகிறேன்!
பதிவுகள் எல்லாம் அழிக்கப்பட்டதாய்
கோரிக்கைகளை மறுத்தனுப்புகிறது
என் ஞாபகக் குறிப்பேடு!
துரோகியாவதற்கு முன்
தோழியாய் இருந்தவளின்
பாதப்பதிவுகளை பரிசோதிக்கிறேன்!
பாதகம் எதுவும் தென்படவில்லை!
இடையினில் எப்படி?
இரவின் நடுநிசியில்
புறக்கண் மூடி
அகக்கண் விழிக்கும்
தருணத்தில்
விம்முதலோடு
விழிகடக்கிறது
இருதுளி கண்ணீர்!
நட்பின் துரோகமாய்
சுயத்தின் இழித்துரைப்பாய்
நற்பண்பின் புறக்கணிப்பாய்.....
இப்படி எல்லாமும்
செய்திருப்பினும்
"கடைசியாய் பார்க்கணும்"
மந்திரச் சொல்லாய்
மனதை பிசைந்தது!
பெயர் கேட்ட மாத்திரத்தில்
கொந்தளித்த உணர்வுகள்
அடுத்த வார்த்தையில்
அப்படியே அடங்கின!
'அய்யோ! என்னவாயிற்று!'
கால்கள் தானே அவ்விடம் நாடின!
எப்போது அவளை
கடைசியாய் பார்த்தது?
நினைவில் இல்லை - ஆனால்
நிச்சயமாய் அவள் இப்படியில்லை!
வானாளின் இறுதியை
தொடப் போகும் அவசரத்திலும்
அவள் முகம் மட்டும் அதே
பவுர்ணமி பொலிவில்!
உடலோ வேதனைகள்
வாட்டியது போக
வறுமை தீண்டியது போக
மீதியாய் ஏதுமில்லை!
'வயதுக் கோளாரில் வந்தவினை'
என் வயோதிக மனது
விரக்தியாய் சொன்னது!
கணவன் கைகுழந்தை
இன்னும் சிலபேர்
சூழயிருந்தும்
நட்பாய் நான் மட்டும்!
"வந்துட்டியா?வரமாட்டியோன்னு..."
"என்னடி நீ!வராம இருப்பேனா?"
"நான் இன்னமும் அப்படியே
தானா உனக்குள்ளே?"
"சரி!தூங்கு!சரியாயிடும்"
ஆதரவாய் தலை தடவினேன்
"சரியாகுமா?"
சலிப்பாய் உதட்டை பிதுக்கினாள்
நடுங்கும் குரலில் சன்னமாய்
"குழந்தை தான் பாவம்!"
இன்னும் சில நிமிடங்களில் .....
செவிலிப் பெண்
சைகையில் சொல்லிப் போனாள்!
எமனை எதிர்க்கும் ஆவேசம்
வந்ததெனக்கு!
கண்ணுக்கு தெரிந்தால் தானே!
விழிவழி பிரிந்தது உயிர்!
நாகரீகம் கருதி இதுவரை
அடக்கிய கண்ணீர்
கதறலாய் வந்தது!
எல்லார் கை மாறியும்
எதிர்பார்த்த அணைப்பு கிட்டாமல்
அலறிய குழந்தையை
அனிச்சையாய் தூக்கினேன்
"அம்மாட்ட போகனும்!"
மழலை இருமுறை சொன்னதும்
என்னுள் செவியுணர்
கருவிகளனைத்தும் செத்துப்போயின!
மரணமடைவதை பார்ப்பது
மரணத்தை விடவும்....
நிகழ் காலத்தையும்
கடந்த காலத்தையும்
துணைக்கழைக்கிறேன்!
இமைகளை இணைத்து
நகங்களை இரையாக்குகிறேன்!
பதிவுகள் எல்லாம் அழிக்கப்பட்டதாய்
கோரிக்கைகளை மறுத்தனுப்புகிறது
என் ஞாபகக் குறிப்பேடு!
துரோகியாவதற்கு முன்
தோழியாய் இருந்தவளின்
பாதப்பதிவுகளை பரிசோதிக்கிறேன்!
பாதகம் எதுவும் தென்படவில்லை!
இடையினில் எப்படி?
இரவின் நடுநிசியில்
புறக்கண் மூடி
அகக்கண் விழிக்கும்
தருணத்தில்
விம்முதலோடு
விழிகடக்கிறது
இருதுளி கண்ணீர்!
நட்பின் துரோகமாய்
சுயத்தின் இழித்துரைப்பாய்
நற்பண்பின் புறக்கணிப்பாய்.....
இப்படி எல்லாமும்
செய்திருப்பினும்
"கடைசியாய் பார்க்கணும்"
மந்திரச் சொல்லாய்
மனதை பிசைந்தது!
பெயர் கேட்ட மாத்திரத்தில்
கொந்தளித்த உணர்வுகள்
அடுத்த வார்த்தையில்
அப்படியே அடங்கின!
'அய்யோ! என்னவாயிற்று!'
கால்கள் தானே அவ்விடம் நாடின!
எப்போது அவளை
கடைசியாய் பார்த்தது?
நினைவில் இல்லை - ஆனால்
நிச்சயமாய் அவள் இப்படியில்லை!
வானாளின் இறுதியை
தொடப் போகும் அவசரத்திலும்
அவள் முகம் மட்டும் அதே
பவுர்ணமி பொலிவில்!
உடலோ வேதனைகள்
வாட்டியது போக
வறுமை தீண்டியது போக
மீதியாய் ஏதுமில்லை!
'வயதுக் கோளாரில் வந்தவினை'
என் வயோதிக மனது
விரக்தியாய் சொன்னது!
கணவன் கைகுழந்தை
இன்னும் சிலபேர்
சூழயிருந்தும்
நட்பாய் நான் மட்டும்!
"வந்துட்டியா?வரமாட்டியோன்னு..."
"என்னடி நீ!வராம இருப்பேனா?"
"நான் இன்னமும் அப்படியே
தானா உனக்குள்ளே?"
"சரி!தூங்கு!சரியாயிடும்"
ஆதரவாய் தலை தடவினேன்
"சரியாகுமா?"
சலிப்பாய் உதட்டை பிதுக்கினாள்
நடுங்கும் குரலில் சன்னமாய்
"குழந்தை தான் பாவம்!"
இன்னும் சில நிமிடங்களில் .....
செவிலிப் பெண்
சைகையில் சொல்லிப் போனாள்!
எமனை எதிர்க்கும் ஆவேசம்
வந்ததெனக்கு!
கண்ணுக்கு தெரிந்தால் தானே!
விழிவழி பிரிந்தது உயிர்!
நாகரீகம் கருதி இதுவரை
அடக்கிய கண்ணீர்
கதறலாய் வந்தது!
எல்லார் கை மாறியும்
எதிர்பார்த்த அணைப்பு கிட்டாமல்
அலறிய குழந்தையை
அனிச்சையாய் தூக்கினேன்
"அம்மாட்ட போகனும்!"
மழலை இருமுறை சொன்னதும்
என்னுள் செவியுணர்
கருவிகளனைத்தும் செத்துப்போயின!
மரணமடைவதை பார்ப்பது
மரணத்தை விடவும்....
உதிர்ந்துவிட்ட பூ நான்....
நான் கொஞ்சி கெஞ்சிய
வார்த்தைகள் எல்லாம்
பொய்யாய் போனதடி..
நீ மௌனமாய் ஆனதால்..
ஒரு நாள் பேசவில்லை என்று
என் மீது அன்பாய் கோபம் கொண்டாய்
அனால் இன்றோ பேசவில்லை
என்றாலும் பரவாயில்லை என்கிறாய்.
உன்னிடம் காட்டிய நேசத்தை
ஒரு செடிகொடி இடம் காட்டிருந்தாலும்!
இந்நேரம் அதோட அன்பை
பூக்களாய் தாந்திருக்கும்!
உன்னிடம் காட்டிய நேசத்தை
ஒரு பறவை விலங்கிடம்
காட்டிருந்தாலும்
தன் உடல் அசைவுகளால் தன்
அன்பை சொல்லிருக்கும்.!
அடைக்க பட்ட இதயத்தில்
அடைபட்ட உனது நினைவுகள்
அனுதினமும் கொஞ்சும் வார்த்தைகள்.
உன்னை சுற்றி வந்தே
சிறகு இழந்த பறவை நான்
கால் மணி நேரம் என்றாலும்
காத்திருப்பேன் உன்னை பார்க்கவே..
ஆனால் இன்றோ..????
எனக்கு நீ கிடைத்த பொக்கிஷமாய்
நான் நினைத்திருந்தேன்..
உன்னை பிரியவே எனக்கு
கஷ்டமாய் இருக்குமடா என்று சொன்னவள்
இன்று பிரியவே பிரியபடுகிறாய்..
மனமில்லாமல் வெறுக்கிறேன்
வாழ்கையின் கடமைகளை நினைத்து
உன்னைவிட்டு விலகவே நினைகிறேன்
மறுகணமே கண்ணீர்விட்டு அழுகிறேன்
என்னைவிட்டு பிரிந்துவிடதே என்று
இருந்தும் மாற்றம் இல்லை
மறந்துவிடு என்னை
நான் மரணித்துவிட்டேன் என்று
நட்பாக கூட என் உறவு உனக்கு வேண்டம்!
தவறி போய்விட்ட என்
வாழ்க்கை பயணம்!
மீளமுடியாமல் தவிக்கிறேன்!
தொலைந்த எனது இரவுகளை
நினைத்து பசிக்கும் நேரத்தை மறந்து
உன்னை பார்க்க வந்த நேரத்தில்
தவறி விழுந்து காயம் பட்ட நாட்களையும்
என்றும் அழியாத நினைவுகளை
எனக்கு நீ கொடுத்த பரிசு!
இத்துணை வருடம் நான் நேசித்ததற்கு.!
செடியில் ஒரு பூ உதிர்வதால்
செடிகளுக்கு என்றும் வருத்தம் இல்லை!
ஒரு பூ உதிர்ந்தாலும் மறு பூ பூத்துவிடும்!
நீ செடியாக நான் அதில்
மலர்ந்த பூவாக!
உதிர்ந்துவிட்ட பூ நான்!
வார்த்தைகள் எல்லாம்
பொய்யாய் போனதடி..
நீ மௌனமாய் ஆனதால்..
ஒரு நாள் பேசவில்லை என்று
என் மீது அன்பாய் கோபம் கொண்டாய்
அனால் இன்றோ பேசவில்லை
என்றாலும் பரவாயில்லை என்கிறாய்.
உன்னிடம் காட்டிய நேசத்தை
ஒரு செடிகொடி இடம் காட்டிருந்தாலும்!
இந்நேரம் அதோட அன்பை
பூக்களாய் தாந்திருக்கும்!
உன்னிடம் காட்டிய நேசத்தை
ஒரு பறவை விலங்கிடம்
காட்டிருந்தாலும்
தன் உடல் அசைவுகளால் தன்
அன்பை சொல்லிருக்கும்.!
அடைக்க பட்ட இதயத்தில்
அடைபட்ட உனது நினைவுகள்
அனுதினமும் கொஞ்சும் வார்த்தைகள்.
உன்னை சுற்றி வந்தே
சிறகு இழந்த பறவை நான்
கால் மணி நேரம் என்றாலும்
காத்திருப்பேன் உன்னை பார்க்கவே..
ஆனால் இன்றோ..????
எனக்கு நீ கிடைத்த பொக்கிஷமாய்
நான் நினைத்திருந்தேன்..
உன்னை பிரியவே எனக்கு
கஷ்டமாய் இருக்குமடா என்று சொன்னவள்
இன்று பிரியவே பிரியபடுகிறாய்..
மனமில்லாமல் வெறுக்கிறேன்
வாழ்கையின் கடமைகளை நினைத்து
உன்னைவிட்டு விலகவே நினைகிறேன்
மறுகணமே கண்ணீர்விட்டு அழுகிறேன்
என்னைவிட்டு பிரிந்துவிடதே என்று
இருந்தும் மாற்றம் இல்லை
மறந்துவிடு என்னை
நான் மரணித்துவிட்டேன் என்று
நட்பாக கூட என் உறவு உனக்கு வேண்டம்!
தவறி போய்விட்ட என்
வாழ்க்கை பயணம்!
மீளமுடியாமல் தவிக்கிறேன்!
தொலைந்த எனது இரவுகளை
நினைத்து பசிக்கும் நேரத்தை மறந்து
உன்னை பார்க்க வந்த நேரத்தில்
தவறி விழுந்து காயம் பட்ட நாட்களையும்
என்றும் அழியாத நினைவுகளை
எனக்கு நீ கொடுத்த பரிசு!
இத்துணை வருடம் நான் நேசித்ததற்கு.!
செடியில் ஒரு பூ உதிர்வதால்
செடிகளுக்கு என்றும் வருத்தம் இல்லை!
ஒரு பூ உதிர்ந்தாலும் மறு பூ பூத்துவிடும்!
நீ செடியாக நான் அதில்
மலர்ந்த பூவாக!
உதிர்ந்துவிட்ட பூ நான்!
அன்பு அம்மா...
அன்பு அம்மா
உன் அருகில் நான் இல்லாவிட்டாலும்
தினமும் உனக்கு குளிப்பாட்டி அழகு பார்க்காவிட்டாலும்
இரவு நிலாச்சோறு ஊட்டாவிட்டாலும்
தொட்டில்லாட்டி தூங்கவைக்காவிட்டாலும்
என் நினைவுகள் என்றும் உன்னை சுற்றியே
என் விடியலிலும் இரவிலும் நீ என்னுடனே
என் வாழ்வின் அர்த்தமும் நீயே
நான் காணும் உலகம் முழுதும் உன் பிம்பங்களே
உன் அருகில் நான் இல்லாவிட்டாலும்
தினமும் உனக்கு குளிப்பாட்டி அழகு பார்க்காவிட்டாலும்
இரவு நிலாச்சோறு ஊட்டாவிட்டாலும்
தொட்டில்லாட்டி தூங்கவைக்காவிட்டாலும்
என் நினைவுகள் என்றும் உன்னை சுற்றியே
என் விடியலிலும் இரவிலும் நீ என்னுடனே
என் வாழ்வின் அர்த்தமும் நீயே
நான் காணும் உலகம் முழுதும் உன் பிம்பங்களே
தோழி....
தோழி
அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை
வருடி செல்லும் இன்னொரு தென்றல்
நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்
விமர்சிக்க ஒரு விமர்சகன்
என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி
என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி
என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்
எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்
நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை
என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்
என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை
நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்
நான் வாழ இன்னுமோர் உறைவிடம்
எனக்காக அழும் இன்னொரு வானம்
எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்
என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி
எனக்காக மட்டும் இறைவம் படைத்த
இன்னொரு உலகமே என் தோழி....
அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை
வருடி செல்லும் இன்னொரு தென்றல்
நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்
விமர்சிக்க ஒரு விமர்சகன்
என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி
என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி
என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்
எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்
நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை
என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்
என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை
நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்
நான் வாழ இன்னுமோர் உறைவிடம்
எனக்காக அழும் இன்னொரு வானம்
எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்
என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி
எனக்காக மட்டும் இறைவம் படைத்த
இன்னொரு உலகமே என் தோழி....
Sunday, January 24, 2010
பால்ய நீரோட்டம்...
பால்ய நீரோட்டம்..
*
நண்பனின்
கைகளை பற்றிக்
கொண்ட
அழுத்தத்தில்..
பால்ய
நீரோட்டமொன்று..
ஆயுள் ரேகையில்..
வழிந்திறங்கியது..!
****
*
நண்பனின்
கைகளை பற்றிக்
கொண்ட
அழுத்தத்தில்..
பால்ய
நீரோட்டமொன்று..
ஆயுள் ரேகையில்..
வழிந்திறங்கியது..!
****
மனிதனாய் பிறந்ததனால் =============================
விரும்பிய திசைகளில் எல்லாம் பயணிக்க
ஒரு பறவையாய் பிறந்திருக்க வில்லை.
எதிர் வரும் எதையும் கொல்ல
ஒரு சிங்கமாய் பிறந்திக்க வில்லை.
பதுங்கி இருந்து பின் பாயும் வித்தை அறிய
ஒரு புலியாய் பிறந்திருக்க வில்லை.
மதியினால் சூது செய்து வாழ
ஒரு நரியாய் பிறந்திருக்க வில்லை.
.
.
.
மனிதனாய் பிறந்ததனால்
வாழும் வகை அறியவில்லை
மிருகங்களின் குணம்
கொண்ட மனித போர்வை
மூடர் மத்தியில்
ஒரு பறவையாய் பிறந்திருக்க வில்லை.
எதிர் வரும் எதையும் கொல்ல
ஒரு சிங்கமாய் பிறந்திக்க வில்லை.
பதுங்கி இருந்து பின் பாயும் வித்தை அறிய
ஒரு புலியாய் பிறந்திருக்க வில்லை.
மதியினால் சூது செய்து வாழ
ஒரு நரியாய் பிறந்திருக்க வில்லை.
.
.
.
மனிதனாய் பிறந்ததனால்
வாழும் வகை அறியவில்லை
மிருகங்களின் குணம்
கொண்ட மனித போர்வை
மூடர் மத்தியில்
விடுமுறை நாள் கல்லூரி...
விடுமுறை நாள் கல்லூரி
இசை இல்லாமலே
இனிதாய் பாடும்
பறவைகள் .....
தென்றல் வந்து
துரத்த இலக்குஇன்றி
எதையோ தேடி
உதிர்ந்த இலைகள்....
ஆசிரியர் மேஜையில்
அமர்ந்தபடி நெல்லிகாவை
எப்படி சாப்பிடுவது என்று
பாடம் எடுத்து
கொண்டு இருக்கிறது
அவ்வபோது கல்லடிக்கு
தப்பும் அணில்கள்...
விடுமுறை என்றாலும்
மூன்று நொடிகளுக்கு
ஒரு துளி என்ற
விதிமுறை மாறாமல்
கசிந்து கொண்டு
இருக்கிறது ஓர் குடிநீர்
குழாயின் கைபாகம்...
மண் மீது
தேங்கிய மழை
நீரால் தாகம்
தீர்த்து கொண்டு
இருக்கிறது
ஓர் காகம்...
எப்போதும் செடிகளின்
இடையே பயணிக்கும்
ரயில் பூச்சி ஒன்று
சுதந்திரமாய் கடந்து
கொண்டு இருக்கிறது
ஓர் நடைபாதையை....
ஆள் இல்லா
வகுப்பு அறைகளை
ஆக்கரமித்து
கொண்டு இருக்கிறது
ஓர் அடர்ந்த அமைதி..
இசை இல்லாமலே
இனிதாய் பாடும்
பறவைகள் .....
தென்றல் வந்து
துரத்த இலக்குஇன்றி
எதையோ தேடி
உதிர்ந்த இலைகள்....
ஆசிரியர் மேஜையில்
அமர்ந்தபடி நெல்லிகாவை
எப்படி சாப்பிடுவது என்று
பாடம் எடுத்து
கொண்டு இருக்கிறது
அவ்வபோது கல்லடிக்கு
தப்பும் அணில்கள்...
விடுமுறை என்றாலும்
மூன்று நொடிகளுக்கு
ஒரு துளி என்ற
விதிமுறை மாறாமல்
கசிந்து கொண்டு
இருக்கிறது ஓர் குடிநீர்
குழாயின் கைபாகம்...
மண் மீது
தேங்கிய மழை
நீரால் தாகம்
தீர்த்து கொண்டு
இருக்கிறது
ஓர் காகம்...
எப்போதும் செடிகளின்
இடையே பயணிக்கும்
ரயில் பூச்சி ஒன்று
சுதந்திரமாய் கடந்து
கொண்டு இருக்கிறது
ஓர் நடைபாதையை....
ஆள் இல்லா
வகுப்பு அறைகளை
ஆக்கரமித்து
கொண்டு இருக்கிறது
ஓர் அடர்ந்த அமைதி..
அப்பா....
நான் உடுத்திய புதுத்துணி
நான் ஒட்டிய சைக்கிள்
நான் வெடித்த பட்டாசு
நான் உண்ட அறுசுவை உணவு
நான் கொண்ட தொப்பை
எதுவுமில்லை உன் உழைப்பின்
வியர்வை இல்லையெனில்...
நான் கற்ற கல்வி
நான் வாங்கிய இஞ்சினியரிங் பட்டம்
நான் கொண்டிருக்கும் பதவி
எதுவுமில்லை உன் மகனைப் பற்றிய
கனவு உனக்கு இல்லையெனில்..
நீ கஷ்டப்பட்டு உழைத்து
என்னை கஷ்டபட விடாமலேயே
வாழ வைத்தாய்
நீ உதிரம் சிந்தி உழைத்து
என்னை வியர்வை கூட சிந்தவிடாமல் செய்தாய்
நான் உயர்வதற்காக நீ
எத்தனை முறை குனிந்தாயோ ??
உன் வரம்பிற்கு மீறி உழைத்து என்னை
என் தகுதிக்கு மீறி உயர்த்தி விட்டாய்
ஐயகோ! இந்தக்கடனை
எத்தனை EMI -களில் அடைக்கப் போகிறேனோ?
நான் உறங்கியது பஞ்சு மெத்தையில் அல்ல
உன் உழைப்பின் மொத்தத்தில்
நான் ஒட்டிய சைக்கிள்
நான் வெடித்த பட்டாசு
நான் உண்ட அறுசுவை உணவு
நான் கொண்ட தொப்பை
எதுவுமில்லை உன் உழைப்பின்
வியர்வை இல்லையெனில்...
நான் கற்ற கல்வி
நான் வாங்கிய இஞ்சினியரிங் பட்டம்
நான் கொண்டிருக்கும் பதவி
எதுவுமில்லை உன் மகனைப் பற்றிய
கனவு உனக்கு இல்லையெனில்..
நீ கஷ்டப்பட்டு உழைத்து
என்னை கஷ்டபட விடாமலேயே
வாழ வைத்தாய்
நீ உதிரம் சிந்தி உழைத்து
என்னை வியர்வை கூட சிந்தவிடாமல் செய்தாய்
நான் உயர்வதற்காக நீ
எத்தனை முறை குனிந்தாயோ ??
உன் வரம்பிற்கு மீறி உழைத்து என்னை
என் தகுதிக்கு மீறி உயர்த்தி விட்டாய்
ஐயகோ! இந்தக்கடனை
எத்தனை EMI -களில் அடைக்கப் போகிறேனோ?
நான் உறங்கியது பஞ்சு மெத்தையில் அல்ல
உன் உழைப்பின் மொத்தத்தில்
தாயின் பிரிவு...
செந்தாமரை முகத்தவளே
பைந்தமிழ் அமுதை ஊட்டியவளே / கொடுத்தவளே
உன் பொருமையைக் கண்டு
நத்தை தன் வேகத்தை குறைத்திடும்
உன் எளிமையைக் கண்டு
காமராஜர் இன்னும் சிக்கனமாக இருக்கக்கூடும்
உன் பண்பை கண்டு
சுனாமி பணிவை உணர்ந்திடக்கூடும்
பாரதியே இக்காலத்தில் பிறந்திருந்தால்
'மம்மி' என்றே அழைத்திருப்பான்
தன் தாயை
என்னை அம்மா என்று
கூற வைத்தவளே
என்னுள் தமிழ் தாயை கலந்திட்டவளே
நான் செய்தப் பிழைத்தான் என்னவோ?
என்னைவிட உனக்கு
யமனைத்தான் பிடிக்குமோ?
பைந்தமிழ் அமுதை ஊட்டியவளே / கொடுத்தவளே
உன் பொருமையைக் கண்டு
நத்தை தன் வேகத்தை குறைத்திடும்
உன் எளிமையைக் கண்டு
காமராஜர் இன்னும் சிக்கனமாக இருக்கக்கூடும்
உன் பண்பை கண்டு
சுனாமி பணிவை உணர்ந்திடக்கூடும்
பாரதியே இக்காலத்தில் பிறந்திருந்தால்
'மம்மி' என்றே அழைத்திருப்பான்
தன் தாயை
என்னை அம்மா என்று
கூற வைத்தவளே
என்னுள் தமிழ் தாயை கலந்திட்டவளே
நான் செய்தப் பிழைத்தான் என்னவோ?
என்னைவிட உனக்கு
யமனைத்தான் பிடிக்குமோ?
மறக்காமல் இருக்க மட்டுமே முடிகிறது...
மறக்காமல் இருக்க மட்டுமே முடிகிறது”
“மறக்க மாட்டீர்கள் தானே” ,
கடைசியாய் சந்தித்தபோது -நீ
கையாட்டி சொல்லியது.
எப்படி முடியும்…………
விழித்ததும் முகம் பார்க்கும் “கண்ணாடி”
நீ கண்டிப்பாய் என்பதால்
பார்க்காமல் வந்ததில்லை உன்னை பார்க்க.
லேசாய் நீர்த்துளி பட சிலிர்க்கும் என் உடல் ,
எனக்கே தெரியாமல் உன் விரல் தொட
என்னுள் நிகழ்ந்த ஒரு ரசாயன மாற்றம்.
காற்றில் விலகும் திரை வழியே
ஜன்னல் நுழையும் நிலா …
லேசாய் களையும் கூந்தல் ஊடே
உன் ஓரக்கண் தரிசனம்….
அன்றாட தொலைகாட்சியின்
பட்டு சேலை விளம்பரம்…..
வெள்ளிகிழமைகளில்
என் தேவியின் தரிசனம்..
புதிதாய் பூத்திருக்கும
பூந்தொட்டி ரோஜா
புத்தாடை பெருமை கொள்ளும்
உன் பிறந்த நாட்கள் .
தாலாட்டு சுகம் காணும்
தாய் மடி குழந்தைகள்..
மாலை நேர சொர்க்கம்
என் நந்தவன தலையணைகள்.
இப்படி ஏதோ ஒன்று
உன்னையும் ,உன்னோடான அந்த
வசந்த காலத்தையும்
நினைவு படுத்தியே தீரும் வேளையில்
உறக்கவே சொல்லிவிடுகிறேன்….
“உன் பெயரை” எப்போதாவது …
தன்னை அழைப்பதாய்….
என்னை அணைத்துக்கொள்ளும்
என் செல்ல மகள் தான்….
ஒவ்வொரு முறையும் காப்பாற்றுவாள் “ உன் பெயரை” ......
என் மனைவியிடமிருந்து.....
உன்னோடான நேரங்களைவிட
உன் நினைவுகள் வந்து செல்லும் நேரம்
அதிகம் என்பதால்
“மறக்காமல் இருக்க மட்டுமே முடிகிறது” ....
“மறக்க மாட்டீர்கள் தானே” ,
கடைசியாய் சந்தித்தபோது -நீ
கையாட்டி சொல்லியது.
எப்படி முடியும்…………
விழித்ததும் முகம் பார்க்கும் “கண்ணாடி”
நீ கண்டிப்பாய் என்பதால்
பார்க்காமல் வந்ததில்லை உன்னை பார்க்க.
லேசாய் நீர்த்துளி பட சிலிர்க்கும் என் உடல் ,
எனக்கே தெரியாமல் உன் விரல் தொட
என்னுள் நிகழ்ந்த ஒரு ரசாயன மாற்றம்.
காற்றில் விலகும் திரை வழியே
ஜன்னல் நுழையும் நிலா …
லேசாய் களையும் கூந்தல் ஊடே
உன் ஓரக்கண் தரிசனம்….
அன்றாட தொலைகாட்சியின்
பட்டு சேலை விளம்பரம்…..
வெள்ளிகிழமைகளில்
என் தேவியின் தரிசனம்..
புதிதாய் பூத்திருக்கும
பூந்தொட்டி ரோஜா
புத்தாடை பெருமை கொள்ளும்
உன் பிறந்த நாட்கள் .
தாலாட்டு சுகம் காணும்
தாய் மடி குழந்தைகள்..
மாலை நேர சொர்க்கம்
என் நந்தவன தலையணைகள்.
இப்படி ஏதோ ஒன்று
உன்னையும் ,உன்னோடான அந்த
வசந்த காலத்தையும்
நினைவு படுத்தியே தீரும் வேளையில்
உறக்கவே சொல்லிவிடுகிறேன்….
“உன் பெயரை” எப்போதாவது …
தன்னை அழைப்பதாய்….
என்னை அணைத்துக்கொள்ளும்
என் செல்ல மகள் தான்….
ஒவ்வொரு முறையும் காப்பாற்றுவாள் “ உன் பெயரை” ......
என் மனைவியிடமிருந்து.....
உன்னோடான நேரங்களைவிட
உன் நினைவுகள் வந்து செல்லும் நேரம்
அதிகம் என்பதால்
“மறக்காமல் இருக்க மட்டுமே முடிகிறது” ....
வயக்காடு வாழ்த்துகிறது!
வயக்காடு வாழ்த்துகிறது!
---------------------------------
மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
யானை கட்டிப் போரடித்த கூட்டம்
இன்று
வீடு கட்டிப் போரடிக்கிறது
என் மேல்!
வயலும்
வயல் சார்ந்ததும் மருதம்...
தொழிலும்
தொழில் சார்ந்தோரும்
பிழைக்க
என் வயிற்றில்
'பாலை" வார்ப்பது
என்ன நியாயம்?
வறண்ட கோடுகளால்
இயற்கையன்னை வதைப்பது போதும்:
இல்லாத கோடுகளால்
தண்ணீர் இல்லாமல் செய்வது
என்ன கொடுமை?
அணைக்கட்டுகள்
என்னை அரவணைக்காததை
என்னவென்பது?
மொழிகளால்
பிரிந்த உங்களிடம்
எந்த மொழியில் வேண்டுவது?
என்னிடம்
ஆழப்பாய்ந்து நீரள்ளிப் பருகும்
வேரில்லை:
நீர்த்தாகம் தீர
உங்களை விட்டால்
கதி வேறில்லை!
பசுமை தந்தேன்
இன்று
சுமையாகிப் போனேன்!
என்னை
வருடிச் சென்ற தென்றல்
நெருடலாய் கேட்கிறது
ஏன் கம்பிகளாய்
மாறி வருகிறாயென்று!
ஏரு பூட்டி சேறு பூசி
என்னை
கிச்சுக்கிச்சுக்காட்டி
விளையாடிய நீங்களா
இன்று
உயிருடன் பிரேதப்பரிசோதனை செய்வது?
---------------------------------
மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
யானை கட்டிப் போரடித்த கூட்டம்
இன்று
வீடு கட்டிப் போரடிக்கிறது
என் மேல்!
வயலும்
வயல் சார்ந்ததும் மருதம்...
தொழிலும்
தொழில் சார்ந்தோரும்
பிழைக்க
என் வயிற்றில்
'பாலை" வார்ப்பது
என்ன நியாயம்?
வறண்ட கோடுகளால்
இயற்கையன்னை வதைப்பது போதும்:
இல்லாத கோடுகளால்
தண்ணீர் இல்லாமல் செய்வது
என்ன கொடுமை?
அணைக்கட்டுகள்
என்னை அரவணைக்காததை
என்னவென்பது?
மொழிகளால்
பிரிந்த உங்களிடம்
எந்த மொழியில் வேண்டுவது?
என்னிடம்
ஆழப்பாய்ந்து நீரள்ளிப் பருகும்
வேரில்லை:
நீர்த்தாகம் தீர
உங்களை விட்டால்
கதி வேறில்லை!
பசுமை தந்தேன்
இன்று
சுமையாகிப் போனேன்!
என்னை
வருடிச் சென்ற தென்றல்
நெருடலாய் கேட்கிறது
ஏன் கம்பிகளாய்
மாறி வருகிறாயென்று!
ஏரு பூட்டி சேறு பூசி
என்னை
கிச்சுக்கிச்சுக்காட்டி
விளையாடிய நீங்களா
இன்று
உயிருடன் பிரேதப்பரிசோதனை செய்வது?
உறவே....
என் உயிர்க்கலந்த உறவே.....!!!!!
எண்ணங்களில் ஒரு வித விரிசல்...
என்னவென்றே புரியாத ஒரு மௌனம்....
நெஞ்சுக்குள் நெலிகிறது ஒரு சோகம்...
அதனால்தானோ என்னவோ....
இதயத்தில் ஒரு வித பாரம்......
இறக்கி வைக்க தெரியவில்லை...
யாரிடம் சொல்லவென்றும் புரியவில்லை.....
என் சோகம் பரிமாற உனையன்றி யாருமில்லை.....
ஆனால் உன்னிடமே சொல்வதற்கு
வழி ஏனோ தெரியவில்லை....
வலியோடு வருகிறேன்.....
உன் பாசமென்ற நங்கூரம் தேடி....!!!!
நாளெல்லாம் வருடிக்கொடு....
நயமாக பேசிவிடு.....
நிலை மாறிய மனதுக்கு
நீ ஒன்றே ஆறுதல்...!!!!
என் மௌனம் கலைக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்..!!!!!!
என்னை மீண்டும் பழைய நிலைக்கு
கொண்டு செல்ல உன்னால் மட்டுமே முடியும்....!!!!!
சோகம் சுமந்த நெஞ்சோடும்....
கண்ணீர் சுமந்த கண்களோடும்....
உன் நிழல் தேடி வருகிறேன்......
எனக்கான அன்பு உள்ளமே.......
உன் தோள் மீது எனை சாய்த்து...!!!!!!!
சோகத்தை போக்கிவிடு.... மீண்டும் என்
வாழ்வை சுகமாக மாற்றிக்கொடு..!!!!!!
உன் அன்பான வார்த்தை கேட்டால்...
அல்லிப்பூவாய் என் முகம் மாறும்...!!!!!
ஆதரவாய் நீ பேச... என் அத்துனை
துன்பமும் அகன்றோடும்..!!!!!
அந்த ஒரு நம்பிக்கையிலே...
உன் அன்பை தேடிவரும்...
உன்னை புரிந்து கொண்ட ஜீவன் இது...!!!!!!!!
எண்ணங்களில் ஒரு வித விரிசல்...
என்னவென்றே புரியாத ஒரு மௌனம்....
நெஞ்சுக்குள் நெலிகிறது ஒரு சோகம்...
அதனால்தானோ என்னவோ....
இதயத்தில் ஒரு வித பாரம்......
இறக்கி வைக்க தெரியவில்லை...
யாரிடம் சொல்லவென்றும் புரியவில்லை.....
என் சோகம் பரிமாற உனையன்றி யாருமில்லை.....
ஆனால் உன்னிடமே சொல்வதற்கு
வழி ஏனோ தெரியவில்லை....
வலியோடு வருகிறேன்.....
உன் பாசமென்ற நங்கூரம் தேடி....!!!!
நாளெல்லாம் வருடிக்கொடு....
நயமாக பேசிவிடு.....
நிலை மாறிய மனதுக்கு
நீ ஒன்றே ஆறுதல்...!!!!
என் மௌனம் கலைக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்..!!!!!!
என்னை மீண்டும் பழைய நிலைக்கு
கொண்டு செல்ல உன்னால் மட்டுமே முடியும்....!!!!!
சோகம் சுமந்த நெஞ்சோடும்....
கண்ணீர் சுமந்த கண்களோடும்....
உன் நிழல் தேடி வருகிறேன்......
எனக்கான அன்பு உள்ளமே.......
உன் தோள் மீது எனை சாய்த்து...!!!!!!!
சோகத்தை போக்கிவிடு.... மீண்டும் என்
வாழ்வை சுகமாக மாற்றிக்கொடு..!!!!!!
உன் அன்பான வார்த்தை கேட்டால்...
அல்லிப்பூவாய் என் முகம் மாறும்...!!!!!
ஆதரவாய் நீ பேச... என் அத்துனை
துன்பமும் அகன்றோடும்..!!!!!
அந்த ஒரு நம்பிக்கையிலே...
உன் அன்பை தேடிவரும்...
உன்னை புரிந்து கொண்ட ஜீவன் இது...!!!!!!!!
Subscribe to:
Posts (Atom)