Friday, June 19, 2009

கிராமத்துக் காதலன்

முத பார்வையிலேயே நொறுங்கிடுச்சி இதயம்;இனிமேலும் வருமாடிஎன் வாழ்வில் உதயம்!வார்த்தை ஒண்ணு சொல்லிபுட்டாசெய்திடுவேன் எதையும்;வார்த்தை மட்டும் வந்துபுட்டாவாடாது என் சதையும்!நேத்து வரைக்கும் தோணலையே வகிடெடுத்து தல வார; சேர்த்துப்புட்டேன் கலர் கலரா சீப்பு மட்டும் ஒரு நூற!உட்காரப் புடிக்கலடிஜன்னல் பக்கம் பஸ்ஸுக்குள்ள; காத்துக் கொஞ்சம் தல கலைச்சா கலங்குறேனே மனசுக்குள்ள!வடிச்சி வச்ச சோறு கூட என் பசிய தூண்டலடி;குடிச்சிப் பார்த்த நாக்கு கூட தேன் ருசிய காட்டலடி!கால் கடுக்க நின்னாலும் கண்டுக்காம போற; கண்டுபிடிசேனே செல்லாம் உன்னோட இன்னொரு பேர!வாரம் முடிஞ்சா கெடச்சிடுமே அஞ்சி நிமிச தரிசனம்;வருசம் முடிஞ்சாலும் வருமாடி என் மேல கரிசனம்!தனியாளா வெளிய வாடி என் காதல் சொல்ல;பிணியாளா புலம்புறேனேஎன் மனசுக்குள்ள!யார் யாரையோ தூது விட்டேன்;என்னென்னமோ செய்துப்புட்டேன்!உன் மனசுஇரங்கலியே!என் மனசு உறங்கலியே!!காதல் இருக்குனு சொல்லிப்புடு -ஒண்ணுஇல்லைனு தள்ளிவிடு எதை எதையோ சொல்லி உன் காதல் மறைக்கறியே; புரியாத பதில் சொல்லி என் நெஞ்ச அறுக்கறியே!செத்த பின்னாவது வருமாடி உன் காதல் மோகம்;அப்ப வந்தாலும் போதுன்டி என் கட்ட வேகும்!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.