நட்பின் பசுமை
எங்கோ
எப்போதோ
இப்பூவுலகில்
ஜனித்த
இரு ஜீவன்கள்...
எப்படியோ
எங்கெங்கோ
சுற்றிக்களித்த
பள்ளிப்பருவ
பாலன்கள்...
முடிந்த நூற்றாண்டின்
முடிவுரை ஆண்டில்...
விடுதலைத் திங்களில்
சுதந்திர தினத்தின்
முந்தைய நாளாம்...
கிழமையும்
திங்களாம்...
காலச் சக்கரத்தின்
சுழற்சியால் அவை
மீண்டும் ஜனித்தன
நட்புலகில்...
நட்(டப்)பு நூற்றாண்டின்
முன்னுரையாய்...
இன்று...
அவற்றின் எட்டாம் அகவையோ
'ஆரம்பப் பள்ளி'யாய்...
எனினும்
நட்பெனும் உள் கிடக்கையின்
எண்ணங்களோ
'உயர் நிலை'யாய்...
கழிந்த ஒவ்வோர் ஆண்டும்
'கலைக்கல்லூரி'யின்
புத்தகங்கலாய்...
ஒவ்வொரு பக்கங்களும் (நாட்களும்)
வாழ்க்கையெனும்
எதுகை மோனை வரிகளுடன்...
இவையனைத்தும்
அன்பெனும் 'பல்கலைகழகத்தால்'
அங்கீகரிக்கப்பட்டவையாய்...
ஒவ்வொரு நாளும்
தேர்வுகள்...
'கேள்விகளால் ஒரு கேள்வி'யாய்...
விடைகளோ...
மெய் எனும் மையினால் தோய்த்த
தூரிகையால் கிறுக்கிட்ட
'கிறுக்கல்களாய்'
'காகித்ப் பூக்கள்' மிதக்கும்
தெளிந்த 'தண்ணீர் தேசத்தில்'...
முடிவுகளோ...
நம்பிக்கையில்...
'சிகரங்களை நோக்கி'...
நினைவுகள் மட்டும்
மனமென்னும் 'இருண்ட வீட்டில்'
ஒவ்வொரு நாழிகையும்
'கள்ளிக்காட்டு இதிகாசமாய்'
சற்று 'சுருக்' கென்றும்...
அதுவும் ஓர்
'அழகின் சிரிப்பாய்'...
எங்கோ விதைத்த பதியங்கள்
சினேக சாரலில்...
கிளைத்துக் கொண்டே இருக்கட்டும்...
என்றென்றும்
நட்பின் பசுமையின்
'ஈரத்துடன்'...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.