Monday, June 22, 2009

எங்கு சென்றாயடி??...

எங்கு சென்றாயடி??...

நீ எனக்குள்
வசித்த உண்மையைக் கூட‌
உன் பிரிவில்தான் உணர்ந்தேன‌டி.....

நீ என்னையே சுற்றி
வளையவரும் போதெல்லாம்
உன் அருமை உணரவில்லை.....

உன் கண்களால் என்னிடம்
கெஞ்சிய போதெல்லாம்
உன் அன்பை உணரவில்லை.....

என் ஒருநொடி பார்வைக்காய்
ஓராயிரம் மணித்துளிகள்-நீ
காத்திருந்த போதெல்லாம்
உன் காதலை உணரவில்லை.....

இன்று-
என்ன‌ருகில் நீ
இல்லையெனும்போது‍‍-என்
நெஞ்சம் கனக்குதடி...!

காலத்தின் கட்டளையால்‍-நீ
பிரிந்ததை எண்ணி எண்ணி
என் கண்கள் கலங்குதடி...!

இனி ஒருமுறையேனும்
உனைப் பார்ப்பேனா என‌
உள்ள‌ம் த‌விக்குத‌டி...!

தென்ற‌லாய் என‌க்குள்
நுழைந்த‌ உன் நினைவுக‌ள்
புய‌லாய்க் கிள‌ம்பி எனைச்
சுட்டெரிக்கும் த‌ருண‌த்தில்-நீ
எங்கு சென்றாயடி??...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.