Monday, June 22, 2009

பிரியவும் நினைத்தாயோ தோழியே...!

பிரியவும் நினைத்தாயோ தோழியே...!

தோழியே!
உன் முகம் என் கண்ணிலும்
உன் நினைவென் நெஞ்சிலும்
சுமப்பதினால் தான்
இன்னமும் சொல்கிறேன்
நான் உன்னை பிரியவில்லை என்று....

கண்மூடி காண்கிறேன்
நம் பள்ளி நாட்களை...
கண்களை திறந்ததும் ஏனோ தெரியவில்லை
என் சுவாசக் காற்றில் படிந்து விட்ட உன் நினைவுகள்
கண்களினோரம் தன் ஈரப் பதத்தினை சின்னமிட்டது..

மனதில் எதோ ஒரு கனம்
அதை எப்படி சொல்வேன் உனக்கு...?
பிரிந்திடவும் நினைத்தாயோ என்னை...?

பள்ளி கால முதல் தோழி நீ...!
என் மனதில் பட்ட முதல் சிநேகம் நீ..!
உன்னுடன் நகர்ந்திட்ட அந்த நாட்கள்..
நான் எப்படி திரும்ப பெற்றிடுவேன்...?

இன்முகமாய் நான் கண்ட உன் முகம்
உன் நட்பினிலே நான் கண்ட உன் உள்ளம்
இன்று...சற்று தள்ளி நின்று என்னை பார்ப்பது ஏனோ..?

விலகியிருப்பதென சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல..
அன்பு தோழியே..!
அது என் இதய துடிப்பினில் நீ ஏற்றிவிட்ட கூறிய வாள்
எடுக்கவும் முடியவில்லை....
வலியினை பொறுக்கவும் முடியவில்லை...



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.