Friday, June 5, 2009

சமிபத்தில் படைத்தது !

மழை பெய்யும் மாலை வேளை
உருத்தாத வெளிச்சம்
தூரத்து இதமான இசை
மேனி தவழும் மென் சாரல்
எதிரே தலையாட்டி புன்னகை செயும் மரங்கள்
ஐம் புலன்களும் ஆழ்தியான ஞானியாய்---- ஆனால்
மனசு மட்டும் இதயமாய்!!

இயற்கை இயற்கையாய் இருந்தும்
எனக்கு மட்டும் இருக்கைஇல்லை
இறந்த கால நிகழ்வுகளில் கடந்த நிகழ்வுகள்
இன்னும் நினைவுகளாய்!!!

என்னை சுற்றி எல்லாம் மர்மமாய்
எல்லாவற்றிக்கும் நான் ஒரு மர்மமாய் ...---சில
பிரிவுகளும் சில இணைவுகளும் போலவே!!!! ...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.