Tuesday, June 23, 2009

விழித்துக் கொள்ளுங்கள்

உன்னால் சாதிக்க இயலாத
காரியம் என்று எதுவும் இல்லை
நீ எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய் உன்னை

வலிமை உடையவனாய் நினைத்தால்
பலசாலியாக திகழ்கிறாய்
வலிமை அற்றவனாய் நினைத்தால்
பலவீனமாய் தெரிவாய் - நான்
எதையும் சாதிக்க வல்லவன் என்று
எப்போதும் நினைத்துக் கொண்டே இரு
உனக்கே தெரியாமல் உனக்குத் தேவையான
வலிமை உன்னுள்ளே புதைந்து கிடக்கிறது
தூய்மை - பொறுமை - விடாமுயற்சி
இவையே உன் வெற்றிக்கு இன்றியமையாதவை
வாழ்க்கை என்னும் போர்களத்தில்
மடிந்து விடும் வீரனாய் ஒருபோதும் இராதே
மரணத்தை விழுங்கும் மாவீரனாய்
எழுந்து நில்--

உன்
நிலைமை எப்படிப்பட்டவை என்று
நினைத்து வருந்தாதே
லட்சியத்தை மட்டுமே பற்றிக்கொண்டு முன்னேறு
எழுந்திரு நண்பா - விழித்துக்கொள்
இனியும் தூங்க எண்ணாதே - அச்சம்
உன்னை
மரணத்திற்கு இழுத்துச் செல்லும் ஆயுதம்
உன்னால் சாதிக்க வேண்டியது
ஆயிரம் ஆயிரம் ---

லட்சியத்திற்காக உன் உயிரையும்
அர்பணிக்கத் தயாராய் இரு.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.