சொல்லிக் கொள்ள வில்லை
எங்கள் இருவருக்குமான காதலை
நான் நன்றாய் இருப்பேன் என்று அவளும்
அவள் நன்றாய் இருப்பாய் என்றும் நானும்
நினைத்து கொண்டிருந்தோம்
அவள் நினைப்பு சரியே
என் நினப்பு?
எதிர் பார்க்கவில்லை அவளை
இப்படி சந்திப்பேன் என்று
எத்தனை குழந்தை என்றாள்
ஒன்று என்றேன்
மூன்று என்றாள் தனக்கு.
என் விழிக் கேள்வியை புரிந்தவளாய்
இவர் தான் அவர் என்றாள்
அன்றைய பிரிவை விட
இன்றைய சந்திப்பின் வலியை அதிகமாக்கியது...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.