Friday, June 19, 2009
கல்லூரி கடைசி நாள்...
விடைபெறுகின்றனபட்டாம்பூச்சிகள்!
கற்பித்தவனைகண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும்தண்டித்ததையும் மறந்து.....
நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,துளிர்க்கும் துளிகளோடும்!
உருவங்களுக்கு இடையில்
புருவங்கள் சுருக்கி,தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!
பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!
கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை
கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!
பனி போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனி அவையாவும் மறந்து,
உலவும் சமாதான புறாக்கள்!
நேற்றுவரை
அழகிய நட்பைசுமந்து அலைந்தோம்!
நாளைமுதல்
பழகிய நினைவுகளைசுமந்து அலைவோம்!
நாம் சுற்றித்திரிந்து
தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும்
பட்டுப்பூச்சிகளுக்காய்..
மனம் வீசும்......
அந்த வனத்தில் வீசிய மனம்நம் மனதில் வீசும் தினம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.