Tuesday, April 27, 2010

Miss you........

இன்றோடு ஒரு ஆண்டு முழுமையாக நிறைவடைந்துவிட்டது நீ என்னை விட்டு பிரிந்து.
அன்றொருநாள் பரஸ்பரம் பரிமாறிகொண்டது நினைவில் வருகிறது.. so...
இன்றும் அன்பே என்றுதான் உனக்கான கடிதம் தொடங்குகிறேன்.
எப்படி இருக்கிறாய் என்று கேட்பதற்கு பதிலாய் என்னை யாபகம் இருக்கா என்றே அழுத்தம் திருத்தமாக தொடர்கிறேன்.
இந்த மாதிரியொரு சூழலுக்கு ஆக்கிவிட்டாயே என்னை??
நாம் ஒன்றாய் கூடிசுற்றிய நாட்களில் என்னை மறந்து விடாதே என்று அடிக்கடி நீ என்னிடம் குறைத்ததன் அர்த்தம் இப்போதான் எனக்கு புரிகிறது. ம்ம்..
நீ என்னை பிரிந்தாலும் நான் உன்னை மறக்ககூடாது என்பதுதானோ அது??
மறந்துவிடாதே என்று சொல்லிவிட்டு மறைந்து போய்விட்டாய் எங்கோ நெடுதூரம்..
என்னால்தான் தொலைக்க முடியவில்லை நினைவுகளை. அடிக்கடி என் கனவுகளில் வந்து நீ கொடுத்த முத்தங்களை திருப்பி கேட்கிறாய்..
அய்யயோ எப்படி அதனை திருப்பி கொடுக்கபோகிறேன் என்று நானும் கனவு தொலைந்து பேந்த பேந்த விழிக்கிறேன்.
தீர்மானித்து விட்டேன் எப்படியும் நீ கொடுத்த முத்தத்தை உன் வகையராவுக்காது கொடுத்துவிடவேண்டுமேன்று.
ஓர் அதிகாலை பொழுதினில் உன்னை walking அழைத்து போய்கொண்டிருக்கையில் நான் எதிர்பாராத கணத்தில்
அந்த லாரி வந்து உன்மேல் ஏறி இறங்கிவிட்டது.
அன்றைய உந்தன் அலறல் சப்தம் இன்னும் என்காதுகளில் ரணமாக ஒலித்துகொண்டிருக்கிறது.
இதற்குமேல் பொறுமை இல்லாதவனாய் விறுவிறுவென சென்றேன் உன் வகையறா நாயொன்றை வாங்குவதற்கு.... இப்படியாக முடித்திருந்த last year டைரியை காலால் பிராண்டி விளையாடிகொண்டிருந்தது என் செல்லகுட்டி ஜூலி...
கதை வாசித்துமுடித்த அபினவ் நூலகத்தை விட்டு எழுந்து செல்கிறான் ஏதோவொரு திருப்தியோடு....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.