விழியால் இதயம் கவர்ந்தவளுக்கு
எளிதாய் இதயம் இழந்தவன் எழுதுகிறேன்.....
இது வரையில் எழுதி பழக்கமில்லாத
கடிதம் என்பதால் ஒரு வித
பதட்டத்தோடு தொடர்கிறேன்......
பாசம் கொட்டி எழுதுவதால்
பல இடங்களில் வார்த்தைகள் அழிந்திருக்கும்...
அழிந்த வார்த்தையின் பொருள்
நான் சொல்லாமலே உனக்கு புரிந்திருக்கும்...
திசை எங்கிலும் தெரியும் உன் முகத்தை
என்னால் மறக்க முடியவில்லை....
துருவி துருவி... நீ கேட்ட போதும் கூட.....
காதலை என் மனதுக்கு சொல்ல தெரியவில்லை.....
மனதார உன்னை நினைக்கிறேன்...
ஆனாலும் சொல்லாமல்
மனதுக்குள்ளே மறைக்கிறேன்....
கருவை சுமக்கும் தாய் கூட....
பத்து மாதத்தில் இறக்கி வைப்பாள்
அந்த சுகமான சுமையை...!!!!!
காதலை சுமக்கும் இதயம்
காதலியிடம் சொல்ல மறுப்பதால்
நித்தமும் குளமாக்குது இமையை..!!!!
வாச மலர் பறித்து வந்து
நேசம் சொல்லவா..????
இல்லை வான் நிலவை அழைத்து
வந்து தூது சொல்லவா?????
தெரியாமல் புரியாமல்
அலை பாயுது மனம்......
அதனால் தான் காதல் கடிதம் ஒன்று
எழுதுகிறேன் இன்றைய தினம்.....
எனக்காக ஆரமித்து... உனக்காக எழுதி.....
நமக்காக முடித்து......
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.....
நீ வரும் பாதையில் காதலை சொல்ல..!!!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.