மலரே உன்ன மறக்க
மாலதீவு போனாலும்
ஒட்டி வரும் உன் நெனப்ப
ஓட்டிடத்தான் முடியுமா?
அத்தமக உனகாக என்
சொத்து எல்லாம் எழுதினாலும்
உன் கன்னகுழி காணாம
என் கண்ணு ரெண்டும் ஏங்குதடி...
விக்கல் வரும் முன்னே
தல தட்ட வந்து நிப்ப;
செல்லமா இடுப்ப கிள்ள
தல தெறிக்க ஓடி நிப்ப....
நம் காதல் நாம் சொல்ல
வார்த்தை ஏதும் தேடல;
வக்கனையா காதலிச்சோம் - அப்ப
வாக்கப்பட தோனல ....
சொத்து ஏதும் இல்லையேன்னு
உன் அத்த எரிஞ்சு கேக்கையில;
மருகி நின்ன என் மாமன்
மறுத்து பேச வழி இல்ல.....
உறவு சண்டையில
உருகொலஞ்சு நின்னோம் ;
உருப்படியா ஒன்னு ( காதல் ) செஞ்சு
நம்ம உறவுகள செதசோம்.....
காதலுக்கு மரியாதை கொடுத்து
விட்டு கொடுத்தோம் நம்மள ;
உன் கல்யாண சேதி கேக்கும் வரை
காலம் கூட நம்பல.....
தாலி ஒன்னு ஏறிச்சின்னா
தல வச்சு படுக்க மாட்டேன் ;
நீ இருக்கும் தெருவுல
நான் வந்து போக மாட்டேன்.....
மாசம் ஒரு தடவ
நல்லது கேட்டது வாரயில;
ஒட்டு மொத்த உறவெல்லாம்
கை தட்டி சிரிச்சு பேசுறப்போ....
இரட்டை உசிரு மட்டும்
மறைவான இடம் தேடி
முகம் மறைச்சு அழுகணுமே......
உன் மடியில தல சாஞ்சு
நெஞ்சோடு முகம் சேர்த்து..
கொஞ்சிப் பேசிய நாட்கள் எல்லாம்
கெஞ்சி கேட்டாலும் கிடைக்குமா.....
அடியே.....
காசு பணம் வாங்கி இருந்தா
கடன அடச்சிருப்பேன் ;
காதல வாங்கிபுட்டேன் - என்
கண்மணிய நெனசுபுட்டேன்....
உசுருக்கும் உனக்கும்
ஒத்தும இருக்கு புள்ள ;
ஒரு தடவ போனா
மறு தடவ கிடைக்குமா....
.
.
ஒரு தடவ போனா
மறு தடவ கிடைக்குமா....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.