Tuesday, April 27, 2010

அந்த நாட்கள்........

வெள்ளி பார்த்து விழித்தெழுந்து
சுள்ளி நெருப்பில் குளிர்காய்ந்து
கிணற்றில் நீந்தி விளையாடித்
களித்த நாட்கள் இனி வருமா?

கொடுக்காப்புளி பழம் பறித்து
குழுவாய்த் தின்ற நாட்களெல்ளாம்
கொட்டிக் கொடுத்து அழைத்தாலும்
கும்பிட்டாலும் இனிவருமா?

பாரவண்டிய்ன் பின்னாலே
புத்தகப் பையை மாட்டி விட்டு
நிலவு நாட்களில் வீடு வந்து
விளையாடிய நாட்கள் இனி வருமா?
ஏரிக்கரையில் விளையாடி
ஏழெட்டு முறை படம் பார்த்த
அந்த நாட்கள் இனிவருமா?

நகர வாழ்க்கை மோகத்தில்
சுகமாய் வாழப் பழகிவிட்டோம்
நடந்து வந்த வழி மறந்தொம்
நலியும் ஊரை மறந்து விட்டோம்!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.