Tuesday, April 27, 2010

கிறுக்கல்கள்

நண்பர்கள் நடுவே
நாம் பேசிக்கோண்டாலும்
நம்மை மட்டுமே பார்த்துக் கொள்ளும்
நம்மிருவர் கண்கள்
நண்பர்களின் கேலிப்பேச்சில்
நம் பெயர் வரும்போது மட்டும்
நகைச்சுவையை புன்னகையாக்கும்
நம்மிருவர் இதழ்கள்
எத்துனை நேரம் பேசிய பின்னும்
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்
வழியின் திருப்பத்தில்
கடைசியாக பார்த்துக் கொள்ளும்
நம் பார்வைகள்
நம்முள் நமக்கு நம்மை உணர்த்தும் நம் காதலை
நவிலப்படாமல் நலிவதை உணர்த்தும் நம் மனதில்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.