நண்பர்கள் நடுவே
நாம் பேசிக்கோண்டாலும்
நம்மை மட்டுமே பார்த்துக் கொள்ளும்
நம்மிருவர் கண்கள்
நண்பர்களின் கேலிப்பேச்சில்
நம் பெயர் வரும்போது மட்டும்
நகைச்சுவையை புன்னகையாக்கும்
நம்மிருவர் இதழ்கள்
எத்துனை நேரம் பேசிய பின்னும்
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்
வழியின் திருப்பத்தில்
கடைசியாக பார்த்துக் கொள்ளும்
நம் பார்வைகள்
நம்முள் நமக்கு நம்மை உணர்த்தும் நம் காதலை
நவிலப்படாமல் நலிவதை உணர்த்தும் நம் மனதில்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.