Tuesday, April 27, 2010

மனிதனாய் பிறந்ததனால்.......

விரும்பிய திசைகளில் எல்லாம் பயணிக்க
ஒரு பறவையாய் பிறந்திருக்க வில்லை.

எதிர் வரும் எதையும் கொல்ல
ஒரு சிங்கமாய் பிறந்திக்க வில்லை.

பதுங்கி இருந்து பின் பாயும் வித்தை அறிய
ஒரு புலியாய் பிறந்திருக்க வில்லை.

மதியினால் சூது செய்து வாழ
ஒரு நரியாய் பிறந்திருக்க வில்லை.
.
.
.
மனிதனாய் பிறந்ததனால்
வாழும் வகை அறியவில்லை
மிருகங்களின் குணம்
கொண்ட மனித போர்வை
மூடர் மத்தியில்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.