விட்டுப் பிரிந்த நினைவுகளும்
தொட்டு தொலைந்த கனவுகளும்
கையை விட்டு கரைந்தாலும்,
காலங்கள் போட்டு வைத்த
கணக்கில்லா புள்ளிக் கோலங்களில்
கரைந்து காணாமலே போகிறேன்...
என்றாவது என் சொற்கள்
உன் நினைவலைகளை மோதிச் செல்லும்...
அந்த நொடியினில் அரைகுறையாய்
என் நியாபகம் வந்து செல்லும்..
எட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகள்
எப்படியும் நான் இருந்தேன் என்று
உனக்கு சொல்லி விடும்
அந்த கணம் அருகமர்ந்து
ஆறுதல் சொல்ல நானிருக்க மாட்டேன்..
அகமும் புறமும் உணர்ந்த நாம்
முகமே பார்க்க முடியாது போயிருக்கும்..
சுழலும் கால சக்கரத்தில்
என் நினைவு தூசிகளும்
எங்கோ சென்றிருக்கும் உன்னை விட்டு.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.