Tuesday, April 27, 2010

அன்பின் அரவணைப்பில் .....

அன்பின் அரவணைப்பில்

ஆண்டவனின் பரிசளிப்பாய்

இதமாய்க் கருவறையில்

ஈரைந்து மாதங்கள்

உறக்கத்தில் கழித்துவிட்டு

ஊழ்வினை அறுத்தெறிய

எடுத்த பிறவியென்றே

ஏகமாய் உணர்ந்துவிட்டு

ஐயமின்றி இறையுணர்ந்து

ஒறுத்தலுண்டு பாவிக்கென

ஓடையைப்போல் வாழ்ந்தேயுந்தன்

ஔசித்தியம் உயர்த்திடுவாய்…

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.