அன்பின் அரவணைப்பில்
ஆண்டவனின் பரிசளிப்பாய்
இதமாய்க் கருவறையில்
ஈரைந்து மாதங்கள்
உறக்கத்தில் கழித்துவிட்டு
ஊழ்வினை அறுத்தெறிய
எடுத்த பிறவியென்றே
ஏகமாய் உணர்ந்துவிட்டு
ஐயமின்றி இறையுணர்ந்து
ஒறுத்தலுண்டு பாவிக்கென
ஓடையைப்போல் வாழ்ந்தேயுந்தன்
ஔசித்தியம் உயர்த்திடுவாய்…
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.