Tuesday, April 27, 2010

அம்மா அழகான அர்த்தம்..!!!

அம்மா..!!
நான் முதல் முதல் உச்சரித்த வார்த்தை..!!
கடவுளின் மறுவுருவம்..!!
கருவறையில் கண தூரம் சுமந்தவள்..!!
கடவுளிடம் பிடிக்காதது இது மட்டும்தான்..??
உன்னை வருத்தி என்னை இந்த உலகத்திற்கு தந்திருக்கிறாரே..!!!
இந்த உலகத்தில் நீ வாழும் காலம் வரை
நானும் வாழ வேண்டும்..!!
உன்னை பிரிந்து வாழும் ஒரு நிமிடம் கூட
இந்த உலகத்தில் வேண்டாம்..!!!
உலக அதிசயங்களில் உந்தன் பெயர் இடம்பெறவில்லை..!!
கடவுளின் பெயர்கள் அந்த வரிசையில் இடம் பெற முடியாதே..!!
கவிதை என்று எதையெல்லாமோ எழுதி இருக்கிறேன்..!!
"அம்மா" என்னும் வார்த்தைக்கு இணையான
கவிதை எங்கு உண்டு??

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.