Tuesday, April 27, 2010

உன் நினைவாக

சில நேரங்களில்
விட்டு கொடுத்து
வாழ்வது
என் சுபாவம்தான்
வாழ்வையே கொடுத்துவிட்டேன்
வாழச்சொல்கிறாய்
*****************************************
இல்லாதவனுக்குதான்
கொடுக்கும் மனமிருக்குமாம்
என்னிடம் இல்லாத மனதை
உனக்கு கொடுக்க துடிக்கின்றேன்

நீ அதை எப்போதோ
பறித்துக்கொண்டாய்
உணராமல்

******************************************
நீ
அனுப்பிய
புகழ் பெற்ற எழுத்தாளரின்
கவி தொகுப்பும்

பொக்கிஷமாய்
நான் சேமித்து வைத்திருக்கும்
குறுஞ்செய்திகளும்

மட்டுமே மிஞ்சியிருக்கின்றன
நீ இல்லாத தருணங்களில்
உன் நினைவாக
********************************************

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.