பகலவனாய் நீயும்வர
பனித்துளியாய் நானுருக
பதறாமல் காதலதை
பகன்றிடவே தினம்துடித்தேன்
தருவாயோ மறுப்பாயோ
தவிப்புடனே அருகில்வர
தயக்கமோடு நாணமதும்
தடுத்திடவே சொல்லிழந்தேன்
கல்லறைக்குப் போகுமுன்னே
கருனைகொண்டு வார்த்தையாலே
காதலனே உரைத்திடுவாய்
காதலுக்கு உயிர்தருவாய்
பள்ளிமுதல் இன்றுவரை
பழகிவரும் நம்உறவை
மரணம்வரை நிலைத்திடவே
மணக்கோலம் எனக்கருள்வாய்…
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.