Tuesday, April 27, 2010

சாரலாய் வந்த மழை.....

சாரலாய் வந்த மழை
தூறலாய் மாறி நின்றும்
சொட்டு சொட்டாய்
வீட்டின் கூரையில்
விட்டு விட்டு
ஒழுகும் மழையில்
கை நீட்டி ஆட்டம் போட
மனமிருந்தும் செயலில்லை
ஏழையாய் பிறந்ததாலே
ஏக்கம்நிறை பெருமூச்சோடு
எதிர்வீட்டு பஜ்ஜி வாசம்
பசியாற நுகர்வதால்...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.