என்றும் போல அன்றும்
கிடைக்குமா கிடைக்காதா அங்கலாய்ப்போடு
அரக்க பரக்க ஓடினேன்
அம்மன் தேர்போல் அசைந்தே
நகர முடியாமல் நகர்ந்து
நெரிசலோடு வரும் பேருந்தில்
முட்டி மோதியே ஏறி
நேரத்திற்கு செல்லவேண்டி தவிப்போடே
நேரமென்னவென கடிகாரம் பார்க்க
பின்புறமாய் ஒரு குறுகுறுப்பு
திரும்பிட நினைக்கும் முன்னே
சட்டையை யாரோ இழுக்க
சட்டேன கோவத்தோடு திரும்ப
சாந்தமானேன் மழலையைக் கண்டு
எங்கோ பார்த்த முகமாய்
என்னுள் ஏதோ குடைய
மன்னிக்கனும் குழந்தையின் செயலுக்கு
மங்கை சொல்கேட்டு நிமிர
மரமாகி நின்றேன், அவளுந்தான்
நிறுத்தம் வந்ததும் இறங்கினேன்
நில்லாமல் பின்னோடும் மனதுடன்..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.