என் அன்பு அம்மா!!!
உன்
கர்ப்ப நிலத்தில் விதைக்கப்பட்டு
உதிரத்தில் ஊறிப்போய்
வெறும் தேகப் பையில்...
உன்
உயிரின் ஒரு துளியை
நிரப்பிக் கொண்டு...
உன்
கனவு மூட்டையின்
ஒரு கனவாய்...
உன்
தொப்புள் கொடியை
வேராய்ப் பிடித்துக் கொண்டு...
ஜனனத்தின் கதவைத் திறந்து
ஜகத்தின் கருங் குழிக்குள்
ஒளிந்துக்கிடக்கும்
மரண விளக்குக்கு
திரித் தூண்ட
வந்த மனிதர்களுள்
நானும் ஒருவனாய்....
விம்மி அழுதுக் கொண்டே
உன்னிலிருந்து
நழுவி விழுந்ததும்
ஆறுதலாய் இருந்தது
உன் புன்னகைதான்....
உன் முகம் தான்
நான் கண்ட முதல் அதிசயம்....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.