Tuesday, April 27, 2010

ஆசைப்பட்டேன்

உன்னை பிரதிபலிக்கும் கண்ணாடியை இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே உடைந்து போவேன் என்று தெரியாமலேயே..

உனக்கு நிழல் கொடுக்கும் மரமாய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே சாய்ந்து விடுவேன் என்று தெரியாமலேயே..

உனக்கு ஒளி தரும் விளக்காய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே அணைந்து விடுவேன் என்று தெரியாமலேயே..

உன் செவிக்கு இசையாய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே ஊமையாகி நிற்பேன் என்று தெரியாமலேயே..

உன்னை கரை சேர்க்கும் படகாய் இருக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே மூழ்கி விடுவேன் என்று தெரியாமலேயே..

உனது கனவுகளை நிஜமாக்க ஆசைப்பட்டேன்,
உன்னாலே என் நினைவுகளையும் இழப்பேன் என்று தெரியாமலேயே..

உன் இதழ்ளில் புன்னகையாய் மாற ஆசைப்பட்டேன்,
உன்னாலே விழிகளிலே நீர் சுமப்பேன் என்று தெரியாமலேயே...

இன்னும் ஆசைப்படுகிறேன் உனை மட்டும்,
உன்னாலே எனதாசை நிராசை ஆகும் என்று தெரிந்துமே.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.