Sunday, January 24, 2010

உறவே....

என் உயிர்க்கலந்த உறவே.....!!!!!
எண்ணங்களில் ஒரு வித விரிசல்...
என்னவென்றே புரியாத ஒரு மௌனம்....
நெஞ்சுக்குள் நெலிகிறது ஒரு சோகம்...
அதனால்தானோ என்னவோ....
இதயத்தில் ஒரு வித பாரம்......

இறக்கி வைக்க தெரியவில்லை...
யாரிடம் சொல்லவென்றும் புரியவில்லை.....
என் சோகம் பரிமாற உனையன்றி யாருமில்லை.....
ஆனால் உன்னிடமே சொல்வதற்கு
வழி ஏனோ தெரியவில்லை....

வலியோடு வருகிறேன்.....
உன் பாசமென்ற நங்கூரம் தேடி....!!!!

நாளெல்லாம் வருடிக்கொடு....
நயமாக பேசிவிடு.....
நிலை மாறிய மனதுக்கு
நீ ஒன்றே ஆறுதல்...!!!!

என் மௌனம் கலைக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்..!!!!!!
என்னை மீண்டும் பழைய நிலைக்கு
கொண்டு செல்ல உன்னால் மட்டுமே முடியும்....!!!!!

சோகம் சுமந்த நெஞ்சோடும்....
கண்ணீர் சுமந்த கண்களோடும்....
உன் நிழல் தேடி வருகிறேன்......
எனக்கான அன்பு உள்ளமே.......

உன் தோள் மீது எனை சாய்த்து...!!!!!!!
சோகத்தை போக்கிவிடு.... மீண்டும் என்
வாழ்வை சுகமாக மாற்றிக்கொடு..!!!!!!

உன் அன்பான வார்த்தை கேட்டால்...
அல்லிப்பூவாய் என் முகம் மாறும்...!!!!!
ஆதரவாய் நீ பேச... என் அத்துனை
துன்பமும் அகன்றோடும்..!!!!!

அந்த ஒரு நம்பிக்கையிலே...
உன் அன்பை தேடிவரும்...
உன்னை புரிந்து கொண்ட ஜீவன் இது...!!!!!!!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.