Tuesday, January 26, 2010

நீ என்பது... நீ மட்டும்தான்...

இன்று உனக்கு பிறந்தநாள்...
அதிகாலை சூரியன் தொடங்கி..
அத்தனையும் அழகாயிருக்கிறது.
.
உனக்காக எழுத அமர்ந்தாலே...
சோகமாய் ஒதுங்கி கொள்கிறது...
என் முந்தைய கவிதைகள்.
.
என் முதல் 18 வருடங்களில்
நீயில்லை...
பின் வந்த மூன்றாண்டுகளில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்..
என் உலகை நிறைத்தவள் நீ.
.
உன் அன்பை
நீ சொன்னதில்லை...
என் அன்பை பற்றியும்..
நீ கேட்டதில்லை...
ஏனெனில் அன்பென்பது...
சொல்லி புரிவதில்லை என...
புரிந்தவள் நீ.
.
உன் கோபம்..
நான் தாங்கியதில்லை...
என் கோபமோ...
உன்னிடம் பலிப்பதேயில்லை.
என் கோபம் கொன்றுபோடும்
குட்டிபிசாசு நீ.
.
தங்கைகள்...
உலகின் குறும்புக்கார தேவதைகள்...
என உணர்த்தியவள் நீ.
.
மௌனம் போர்த்தியிருந்த
என் பாதைகளில்...
இசை வழியவிட்டவள் நீ.
.
யாருடைய உலகையும்
நொடியில் அழகாக்கும்
மிக அழகானவள் நீ.
.
என் கவிதைகளில் வரும்
தேவதைகள் அத்தனையும்...
உன் சாயல் போர்த்தியே உலவுகின்றன..
தேவதைகளின் தேவதை நீ.
.
என்னில் நிரந்தரமாய் தங்கிவிட்ட..
புன்னகை நீ.
நான் எத்தனை எழுதினாலும்...
முடியாத கவிதை நீ..
.
உலக தேவதைகளில்..
தங்க தேவதை நீ...
என் உலகை அழகாக்கும்..
தங்கை தேவதை நீ.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.