உன்மீதான காதல்
கவிதையாய் கசியுமேயானால்
ஒருவேளையது
புன்னகையாகவோ
கண்ணீராகவோ
கோபமாகவோ
பிரசவிக்ககூடும் ..
நீ கொட்டிதீர்க்கும்
மௌனத்தை காட்டிலும்
ரகசியமானதொரு செய்தியை
கொண்டுபோய் சேர்க்கலாம்
சில தருணங்களில்
காலியாக நிரப்பபட்ட காகிதங்கள் ..
எழுதமறந்த கவிதையாக
காற்றோடு கலக்கட்டும்
எனது காதலும்
உனது மௌனமும் .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.