நான் உடுத்திய புதுத்துணி
நான் ஒட்டிய சைக்கிள்
நான் வெடித்த பட்டாசு
நான் உண்ட அறுசுவை உணவு
நான் கொண்ட தொப்பை
எதுவுமில்லை உன் உழைப்பின்
வியர்வை இல்லையெனில்...
நான் கற்ற கல்வி
நான் வாங்கிய இஞ்சினியரிங் பட்டம்
நான் கொண்டிருக்கும் பதவி
எதுவுமில்லை உன் மகனைப் பற்றிய
கனவு உனக்கு இல்லையெனில்..
நீ கஷ்டப்பட்டு உழைத்து
என்னை கஷ்டபட விடாமலேயே
வாழ வைத்தாய்
நீ உதிரம் சிந்தி உழைத்து
என்னை வியர்வை கூட சிந்தவிடாமல் செய்தாய்
நான் உயர்வதற்காக நீ
எத்தனை முறை குனிந்தாயோ ??
உன் வரம்பிற்கு மீறி உழைத்து என்னை
என் தகுதிக்கு மீறி உயர்த்தி விட்டாய்
ஐயகோ! இந்தக்கடனை
எத்தனை EMI -களில் அடைக்கப் போகிறேனோ?
நான் உறங்கியது பஞ்சு மெத்தையில் அல்ல
உன் உழைப்பின் மொத்தத்தில்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.