Tuesday, January 26, 2010

மறக்கவில்லை மன்னித்துவிடு......

கரம் பிடிக்க காத்திருந்த என்னிடம் இனி நாம்
மணமுடிக்க முடியாது என்றாய்
கண்ணீரில் அஸ்த்தமிக்கும் முன் உன் கண்கள்
"நீ இறந்துவிடு" என்றோர் வரம் வீசி மறைந்தது
நீயோ கண் மூடி சபித்தாய்
"என்னை மறந்துவிடு" என்று

காதலி தன் கடைக்கண்ணசைவுக்கு கல்லையும் கரைப்பவன்
கடைசி கண்ணசைவுக்கு தன்னையே உருக்குவான்
நம்மைப் பிரித்திடலாம் என எண்ணினாய் போலும்

விழியிலே நுழைந்து
மனதிலே திரிந்து
உயிரிலே கலந்துள்ளாய்

ஒற்றை வரியில் அணு அணுவாய் சிதைத்தாய்
ஒவ்வொரு அணுவின் கடைசி சுற்றுப்பாதை வரை சுழன்று எனை வதைத்தாய்

உன்னை பிரிக்க நினைத்த ஒவ்வொரு முறையும்
இன்னும் ஒரு ஹிரோஷிமாவாய் என் உடல் மரித்தது - உயிர் பிரியாமல்

மறக்கவில்லை மன்னித்துவிடு

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.