Sunday, January 24, 2010

தாயின் பிரிவு...

செந்தாமரை முகத்தவளே
பைந்தமிழ் அமுதை ஊட்டியவளே / கொடுத்தவளே

உன் பொருமையைக் கண்டு
நத்தை தன் வேகத்தை குறைத்திடும்
உன் எளிமையைக் கண்டு
காமராஜர் இன்னும் சிக்கனமாக இருக்கக்கூடும்
உன் பண்பை கண்டு
சுனாமி பணிவை உணர்ந்திடக்கூடும்

பாரதியே இக்காலத்தில் பிறந்திருந்தால்
'மம்மி' என்றே அழைத்திருப்பான்
தன் தாயை

என்னை அம்மா என்று
கூற வைத்தவளே
என்னுள் தமிழ் தாயை கலந்திட்டவளே

நான் செய்தப் பிழைத்தான் என்னவோ?
என்னைவிட உனக்கு
யமனைத்தான் பிடிக்குமோ?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.