அன்புள்ள என் கவிதைக்கு,
உன்மேல் நான் காதல் கொண்டதால்!
ஏடும் எழுதுகோலும் காணிக்கையாய் படைத்து,
வணங்கி உன்னை வரவேற்றேன்.
எனக்கு தரிசனம் தரமறுத்தாய்.
தனிமையில் எதிர்பாராத நேரத்தில்
அணை உடைத்துவரும் வெள்ளம்போல் வந்து
என் மனதை மிதக்கவிட்டு அதிர்ச்சி அளித்தாய்!
அவ்வெள்ளத்தில் நீச்சலடித்து
ஏடும் எழுதுகோலும் எங்கே தேடுவேன்?
முயற்சித்தேன் கைகூடவில்லை.
நான் அசுரனானதால் நீ வரும் நேரம்
உன்னை சிறைப் பிடிக்கவே!
என் ஆயுதான்களாக ஏடும் எழுதுகோலும்
தயாராக என்னுடனே வைத்துப் பழகுகிறேன்.
உன்னை சிறைபிடித்துவிடுவேன் என்பதால்
நீ வராமல் இருந்துவிடாதே!
உன்மேல் நான் கொண்ட காதலினாலே
எப்போதும் நீ என்னுடனே இருக்கவே.
உன்னை கேட்கிறேன்
மனதில் உதித்த நீ என்றும் என்
கனவிலும் துணையிருப்பாய் என!
உன் விருப்பத்தை தெருவிக்க
மீண்டும் வருவாய் என்ற எதிர்பார்ப்புடன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.